புதுடெல்லி: குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் நடைபெற்ற 2002 கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி (அப்போதைய முதல்வர்) உள்பட 64 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
ஜாகியா ஜாஃப்ரியை சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் நடத்தி வரும் தன்னார்வ அமைப்பு ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.
ஜாஃப்ரியின் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்த மறுநாள், தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் சனிக்கிழமையன்று குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தீஸ்தா சீதல்வாட் கைதுசெய்யப்பட்டதற்கு இந்தியாவின் அனைத்துலக மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.