சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் கைது

சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் கைது

1 mins read
98e38883-767b-49ff-b0ba-80ef9b3a20de
சமூக ஆர்­வ­லர் தீஸ்தா சீதல்­வாட் (படம்: இணையம்) -

புது­டெல்லி: குஜ­ராத் மாநி­லத்­தின் கோத்­ரா­வில் நடை­பெற்ற 2002 கல­வ­ரம் தொடர்­பான வழக்­கில் பிர­த­மர் நரேந்­திர மோடி (அப்­போ­தைய முதல்­வர்) உள்­பட 64 பேர் விடு­விக்­கப்­பட்­ட­தை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி என்­ப­வர் மனு தாக்­கல் செய்­தார்.

ஜாகியா ஜாஃப்ரியை சமூக ஆர்­வ­லர் தீஸ்தா சீதல்­வாட் நடத்தி வரும் தன்­னார்வ அமைப்பு ஆத­ரித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஜாஃப்ரி­யின் மனுவை உச்­ச­நீதி­மன்­றம் வெள்­ளிக்­கி­ழமை தள்­ளு­படி செய்த மறு­நாள், தீஸ்தா சீதல்­வாட், முன்­னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகு­மார் ஆகி­யோர் சனிக்­கி­ழ­மை­யன்று குஜ­ராத் பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரிவு காவல் துறை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

தீஸ்தா சீதல்­வாட் கைது­செய்­யப்­பட்­ட­தற்கு இந்­தி­யா­வின் அனைத்­து­லக மனித உரிமை ஆணை­யம் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.