செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7d0b5685-92bf-4fe8-8750-f825e516eab5
-

பிர­த­மர் மோடிக்கு ஜெர்­ம­னி­யில் உற்­சாக வர­வேற்பு

பெர்­லின்: பிர­த­மர் நரேந்­திர மோடி ஜி7 மாநாட்­டில் பங்­கேற்­ப­தற்­காக ஜெர்­ம­னிக்­குச் சென்­றுள்­ளார். அவ­ருக்கு அங்கு உற்­சாக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது. டெல்­லி­யில் இருந்து தனி விமா­னம் மூலம் ஜெர்­மனி சென்­றார். முனிச்சி விமான நிலை­யத்­தில் வந்­தி­றங்­கிய பிர­த­ம­ருக்கு அந்­நாட்­டின் பாரம்­ப­ரிய முறைப்­படி இசை நிகழ்ச்சி நடத்தி பிர­த­மர் மோடியை வர­வேற்­ற­னர். பிர­த­மர் மோடி­யின் வரு­கையை ஒட்டி முனிச்சி விமான நிலை­யத்­துக்கு வெளியே இந்­தி­யர்­கள் காத்­தி­ருந்து வர­வேற்பு அளித்­த­னர். தேசிய கொடியை ஏந்தி அவர்­கள் பிர­த­ம­ர் மோடிக்கு உற்­சாக வர­வேற்­ப­ளித்­த­னர்.

அரசு பள்­ளி­க­ளுக்கு படை­யெ­டுக்­கும் தனி­யார் பள்ளி மாண­வர்­கள்

பனஸ்­கந்தா: குஜ­ராத் மாநி­லத்­தில் அம்­மா­நில அரசு நடத்­தும் பள்­ளிக்­கூ­டங்­களின் தரம் உயர்ந்­துள்­ளதை அடுத்து, அங்கு தனி­யார் பள்­ளி­களில் பயி­லும் பிள்­ளை­களை, பெற்­றோர்­கள் அர­சுப் பள்­ளி­களில் சேர்க்க ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர்.

குஜ­ராத் அர­சின் தொடக்­கக் கல்­வித் துறை வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி, மாநி­லம் முழு­வ­தும் 2018-19 ஆண்­டில் 33,822 மாண­வர்­களும், 2019-20 ஆண்­டில் 31,382 மாண­வர்­களும் தனி­யார் பள்­ளி­களில் இருந்து அரசுப் பள்ளி­க­ளுக்கு இட­மா­றி­யுள்­ள­னர். பனஸ்­கந்தா மாவட்­டத்­தில் மட்­டும் 2,969 தனி­யார் பள்ளி மாண­வர்­கள் அரசுப் பள்­ளி­களில் சேர்ந்­துள்­ள­னர். இந்த மாவட்­டத்­தில் மட்­டும் இந்த ஆண்டு, ஆறு தனி­யார் பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ள­தாக மாவட்ட பள்ளிக் கல்­வித்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மும்­பை­யில் குடி­நீர் தட்­டுப்­பாடு

மும்­பை­: மும்­பைக்கு குடி­நீர் வழங்­கும் ஏரி­க­ளின் நீர் மட்­டம் குறைந்­துள்­ள­தால் வரும் காலங்­களில் அங்கு குடி­நீ­ருக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­படும் நிலை உரு­வா­கும் என்று ஆய்­வா­ளர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

மும்­பை­யில் மழைக்­கா­லம் தொடங்­கி­னா­லும் அங்­குள்ள நீர்ப்­பி­டிப் பகு­தி­களில் மழை பெய்­யா­த­தால் குடி­நீர் வழங்­கும் அங்­கி­ருக்­கும் ஏழு ஏரி­க­ளின் நீர் மட்­டம் தேவைக்­கேற்ப உய­ர­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

கர்­நா­டக கல்­வித்­துறை பெயர் மாற்­றம்

பெங்­க­ளூர்: கர்­நா­டக பள்­ளிக்­கல்­வித்­து­றை­யின் பெயர் மாற்­றம் செய்­யப்­பட்டு உள்­ளது. பள்­ளி­க்கல்­வித்­துறை இனி 'பள்ளி­க்கல்வி மற்­றும் எழுத்­த­றிவு துறை' என்று அழைக்­கப்­படும். இந்த பெயர் மாற்­றம் தொடர்­பாக நிபு­ணர்­க­ளு­டன் கலந்து ஆலோ­சிக்­கப்­பட்டு முடிவு எடுக்­கப்­பட்டு உள்­ளது.

மத்­திய அரசு பல்­வேறு மாநி­லங்­களில் பள்­ளிக்­கல்­வித்­துறை பள்ளி கல்வி மற்­றும் எழுத்­த­றிவு துறை என்று தான் நடை­மு­றை­யில் உள்­ளது. அதன் அடிப்­ப­டை­யில் பெயர் மாற்­றப்­பட்டு உள்­ளது.