'பணத்திற்கு விலைபோன அதிருப்தி எம்எல்ஏக்கள்'

'பணத்திற்கு விலைபோன அதிருப்தி எம்எல்ஏக்கள்'

2 mins read
9b38152f-5b3a-48c4-bdec-1d708a4decd5
-

மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்யா தாக்கரே வருத்தம்

மும்பை: சிவ­சேனா கட்­சி­யின் அதி­ருப்தி எம்­எல்­ஏக்­கள் லட்­சங்­க­ளுக்­கும் கோடி­க­ளுக்­கும் ஆசைப்­பட்டு தங்­களை விற்­று­விட்­ட­னர் என்று மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­யின் மக­னும் மாநில அமைச்­ச­ரு­மான ஆதித்யா தாக்­கரே தெரி­வித்­துள்­ளார்.

சொந்த கட்­சி­யி­னரே இவ்­வாறு துரோ­கம் செய்­வார்­கள் என கட்­சித்­த­லைமை எதிர்­பார்க்­க­வில்லை என்று அவர் கூறி­யுள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் உத்­தவ் தாக்­கரே தலை­மை­யி­லான கூட்­டணி அர­சுக்கு கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. சிவ­சே­னா­வைச் சேர்ந்த 40க்குள் மேற்­பட்ட அதி­ருப்தி எம்­எல்­ஏக்­கள் கட்­சித் தலை­மைக்கு எதி­ராக போர்க்­கொடி உயர்த்தி உள்­ள­னர்.

நடப்பு ஆட்­சிக்கு அளித்து வந்த ஆத­ரவை விலக்­கிக்­கொள்­வ­தாக அவர்­கள் சார்­பில் உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், அதி­ருப்தி எம்­எல்­ஏக்­களை ஆதித்ய தாக்­கரே கடு­மை­யாக சாடி­யுள்­ளார்.

"மகா­ராஷ்­டி­ரா­வில் கூட்­டணி அரசு அமைக்­கப்­பட்­ட­போது, அதில் இடம்­பெற்ற காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­கள் சிவ­சே­னா­வுக்குத் துரோ­கம் செய்ய வாய்ப்பு உள்­ள­தாக சிலர் கூறி­னார்­கள். கடை­சி­யில் சொந்தக் கட்­சி­யி­னரே எங்களுக்குத் துரோ­கம் இழைத்­துள்­ள­னர்.

"லட்­சங்­க­ளுக்­கும் கோடி­க­ளுக்­கும் ஆசைப்­பட்டு அதி­ருப்தி எம்­எல்­ஏக்­கள் தங்­களை விற்­று­விட்டனர்.

"அதி­ருப்தி எம்­எல்­ஏக்­க­ளுக்கு தலைமை ஏற்­றுள்ள ஏக்­நாத் ஷிண்டே பெரிய நாட­கத்தை நடத்­தி­விட்டு கட்­சிக்கு எதி­ராக திரும்­பி­யுள்­ளார்," என்­றார் ஆதித்ய தாக்­கரே.

அசா­மில் வெள்­ளப்­பெ­ருக்கு கார­ண­மாக லட்­சக்­க­ணக்­கா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், அம்­மா­நில மக்­கள் தங்­கும் இட­மும் உண­வும் இன்றி தவித்­துக் கொண்­டி­ருக்­கும்­போது அங்கு முகா­மிட்­டுள்ள அதி­ருப்தி எம்­எல்­ஏக்­கள் மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்­ளார்.

அதி­ருப்தி எம்­எல்­ஏக்­க­ளின் ஒரு நாள் உண­வுக்­காக ஒன்­பது லட்­சம் ரூபாய் செல­வி­டப்­ப­டு­வ­தா­க­வும் அதை­விட அவ­மா­னத்­துக்­கு­ரிய விஷ­யம் இருக்க முடி­யாது என்­றும் ஆதித்ய தாக்­கரே கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, அதி­ருப்தி எம்­எல்­ஏக்­களை சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை சிவ­சே­னா­வைச் சேர்ந்த ஐந்து எம்­பிக்­கள் அடங்­கிய குழு மேற்­கொண்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

ஏக்­நாத் ஷிண்­டேயின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக உள்­ளார். முதற்­கட்­ட­மாக, ஸ்ரீகாந்த்தை சமா­தா­னப்­படுத்தி, அவர் மூல­மாக ஏக்­நாத்தை அணுக அவர்­கள் முயற்சி செய்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.