பஞ்சாப்பில் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

பஞ்சாப்பில் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

1 mins read
de45e0e1-ad37-43b8-b039-346067aa59f1
-

சண்­டி­கர்: ஜூலை 1ஆம் தேதி முதல் பஞ்­சாப் மாநி­லத்­தில் அனை­வ­ருக்­கும் இல­வச மின்சாரம் வழங்­கப்­படும் என அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது.

ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் மாதந்­தோ­றும் முந்­நூறு யூனிட் மின்­சா­ரம் கட்­ட­ண­மின்றி வழங்­கப்­படும் என மாநில நிதி­நிலை அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் தேர்­த­லுக்கு முன்பு அளித்த வாக்­கு­று­தியை ஆம் ஆத்மி நிறை­வேற்றி உள்­ள­தாக அம்­மா­நில நிதி அமைச்­சர் ஹர்­பால் சிங் சீமா தெரி­வித்­துள்­ளார்.

2022 - 23ஆம் ஆண்­டுக்­கான நிதி­நிலை அறிக்­கையை நேற்று முன்­தி­னம் பஞ்­சாப் சட்­டப்­பே­ர­வை­யில் அவர் தாக்­கல் செய்­தார்.

இம்­முறை பொது சுகா­தா­ரம், விவ­சா­யம், கல்வி ஆகி­ய­வற்­றுக்கு கூடு­தல் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்ட அவர், விவ சாயி­க­ளுக்குத் தொடர்ந்து இல­வச மின்­சா­ரம் வழங்­கப்­படும் என்­றும் தெரி­வித்­தார்.