புனே: மகாராஷ்டிராவில் அண்மையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் விஷம் வைத்து கொல்லப்பட்டது அம்பலமாகி உள்ளது.
முன்னதாக, சாங்கிலி மாவட்டம், மாய்சல் கிராமத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான, 49 வயதுடைய மாணிக் எல்லப்பா, அவரது சகோதரர், 74 வயது தாய், நான்கு குழந்தைகள் என ஒன்பது பேரின் சடலங்கள் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டன.
கடன் தொல்லை காரணமாக அக்குடும்பத்தார் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாணிக் எல்லப்பா வீட்டில் ஓட்டுநராக வேலை பார்த்த அப்பாஸ் என்பவர், அந்தக் குடும்பத்துக்குச் சேர வேண்டிய, மறைக்கப்பட்ட புதையல் ஒன்றைக் கண்டுபிடிப்பதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
மோசடி செய்தது தெரியாமல் இருக்க, தீரஜ் என்ற மந்திரவாதியுடன் சென்று மாணிக் குடும்பத்தார் முன்னிலையில் சில பூசைகளைச் செய்து, தீர்த்தத்தில் விஷம் கலந்து அனைவரையும் குடிக்கச் செய்து கொன்றுள்ளார் அப்பாஸ்.