நடப்பு மாநிலங்களவை உறுப்பினர்களில் 31% மீது குற்ற வழக்குகள் உள்ளன

நடப்பு மாநிலங்களவை உறுப்பினர்களில் 31% மீது குற்ற வழக்குகள் உள்ளன

2 mins read
311e56db-5dd0-4b0b-a059-6d6ce454e8d7
-

புது­டெல்லி: மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர்­களில் 31 விழுக்­காட்­டி­னர் மீது குற்ற வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளது தெரி­ய­வந்­துள்­ளது. தமி­ழக எம்­பிக்­கள் ஆறு பேரும் இதில் அடங்­கு­வர்.

ஜன­நா­யக சீர்­தி­ருத்த சங்­கம், தேசிய தேர்­தல் கண்­கா­ணிப்­ப­கம் ஆகிய இரு அமைப்­பு­கள் இது தொடர்­பான விவ­ரங்­களை வெளி­யிட்­டுள்­ளன.

மாநி­லங்­க­ள­வை­யின் நடப்பு எம்­பிக்­கள் தங்­கள் மீதான குற்ற வழக்கு, சொத்து விவ­ரங்­களை தெரி­வித்­துள்­ள­னர். அவற்­றின் அடிப்­ப­டை­யில், அவ்­விரு அமைப்பு­களும் விரி­வான அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டன.

மாநி­லங்­க­ள­வை­யில் மொத்தம் 233 உறுப்­பி­னர்­கள் உள்ள நிலையில், ஏழு பேர் விவ­ரங்­களை வெளி­யி­ட­வில்லை. மீத­முள்ள 226 பேரில் 197 பேர் கோடீஸ்­வ­ரர்­கள் ஆவர். இது மொத்த எண்­ணிக்­கை­யில் 87 விழுக்­காடு ஆகும்.

71 எம்­பிக்­கள் மீது குற்ற வழக்கு­கள் பதி­வாகி உள்­ளன. இது மொத்த எண்­ணிக்­கை­யில் 31 விழுக்­காடு ஆகும்.

இவர்­களில் இரு­பது பேர் பாஜகவைச் சேர்ந்­த­வர்­கள். காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­கள் 12 பேர், திரிணா­மூல் காங்­கி­ரஸ் உறுப்­பினர்­கள் மூன்று பேர், ராஷ்­டி­ரிய ஜனதா தளத்­தின் ஐந்து பேர் மீது குற்ற வழக்­கு­கள் உள்­ளன.

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் (4 பேர்), ஆம் ஆத்மி (3 பேர்), ஒய்எஸ்­ஆர் (3 பேர்), தேசி­ய­வாத காங்­கி­ரஸ் (2 பேர்) கட்­சி­யி­ன­ரும் குற்ற வழக்­கு­களை எதிர்­கொண்டுள்­ள­னர்.

அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டிர எம்பிக்­கள் 12 பேர் மீது வழக்­கு­கள் உள்­ளன. தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஆறு பேர் இப்­பட்­டி­ய­லில் உள்­ள­னர்.

37 உறுப்­பி­னர்­கள் மீது கடும் குற்­றங்­க­ளுக்­காக வழக்­குப்­பதிவாகி உள்­ளது.

அவர்­களில் இரு­வர் கொலை வழக்­கை­யும் நான்கு பேர் கொலை முயற்சி வழக்­கை­யும் எதிர்­கொண்­டுள்­ளனர்.

நான்­கு எம்­பிக்­கள் பெண்­களுக்கு எதி­ரான குற்ற வழக்கு­களில் சிக்­கி­யுள்ள நிலை­யில், காங்கி­ரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.வேணு­கோ­பால் மீது பாலி­யல் வன்­கொ­டுமை வழக்கு பதி­வாகி உள்­ளது.