ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழிப் பொருள்களுக்கு நாடு முழுவதும் தடை

ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழிப் பொருள்களுக்கு நாடு முழுவதும் தடை

2 mins read
6a269b7d-663c-4176-a38c-973f27d85347
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் ஒரு­முறை பயன்­ப­டுத்­தப்­படும் நெகிழிப் பொருள்­க­ளின் உற்­பத்­திக்­கும் விற்­ப­னைக்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த உத்­த­ரவு அம­லுக்கு வரும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

நெகி­ழிப் பொருள்­க­ளின் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­வ­தாக சமூக ஆர்­வ­லர்­கள் தொடர்ந்து சுட்­டிக்­காட்டி வந்­த­னர். இதை­ய­டுத்து நெகி­ழிப் பயன்­பாட்டை தடுப்­பதற்­கான வழி­மு­றை­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வந்­தது.

இந்­நி­லை­யில், ஒரு­முறை மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­படும் நெகி­ழிப் பொருள்­க­ளுக்கு தடை­வி­திப்­பது என முடி­வா­னது. இதற்­கான அறி­விப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதியே மத்­திய சுற்­றுச்­சூழல் அமைச்சு அறி­வித்­தது.

அதன்­படி, ஒரு­முறை மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­படும் நெகி­ழிப் பொருள்­க­ளுக்­கான தடை ஜூலை 1 (நாளை) முதல் அம­லுக்கு வரு­வ­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. இந்த நெகி­ழிப் பொருள்­க­ளின் உற்­பத்தி, இறக்­கு­மதி, சேமிப்பு, விநி­யோ­கம், விற்­பனை, பயன்­பாடு ஆகிய அனைத்­துக்­கும் தடைவிதிக்­கப்­பட்­டுள்­ளது.

இனி நாடு முழு­வ­தும் புதிய வணிக உரி­மங்­கள் வழங்­கும்­போது, ஒரு­முறை மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­படும் நெகி­ழிப் பொருள்­களை விற்­க­மாட்­டோம் என்ற நிபந்­தனை விதிக்­கப்­படும். இதை உள்­ளூர் அதி­கா­ரி­கள் கடைப்­பி­டிக்க வேண்­டும் என­வும் மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

இந்த நிபந்­த­னையை மீறும் பட்­சத்­தில் வணிக உரி­மங்­கள் ரத்து செய்­யப்­படும்.

தடையை மீறு­ப­வர்­க­ளுக்கு சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்புச் சட்­டத்­தின் கீழ் 5 ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை அல்­லது அதி­க­பட்­ச­மாக ஒரு லட்­சம் ரூபாய் அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

இந்­தி­யா­வில் கடந்த 2019-20ஆம் ஆண்­டில் மட்­டும் 34 லட்­சம் டன் நெகி­ழிக் கழி­வு­கள் உரு­வா­கி­யுள்­ளன.