மகள்களைக் கொன்று சடலங்களுடன் இரவு முழுவதும் நகரைச் சுற்றிய தந்தை

கர்நாடகாவில் தமது மகள்களைக் கொன்று, அவர்களை சடலங்களை தமது ஆட்டோரிக்‌ஷாவில் வைத்து இரவுமுழுவதும் ஓட்டிவிட்டு மறுநாள் காவல்துறையிடம் சரண் அடைந்தார்.

லக்‌ஷ்மிகாந்த் எனும் அந்த ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் தமது மகள்களான 11 வயது சோனி, 9 வயது மயூரி இருவரையும் கழுத்தை நெறித்துக் கொன்றார் என்று கூறப்பட்டது.

கலாபுராகி எனும் ஊரில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மாலை அந்தக் கொலைச் சம்பவம் நடந்தது. மகள்களைச் கொன்றுவிட்டு அவர்களின் சடலங்களை ஆட்டோரிக்‌ஷாவில் ஏற்றினார்

மனம் குழம்பிய நிலையில் இரவு முழுவதும் அவர் ஆட்டோரிக்‌ஷாவை ஓட்டிக்கொண்டிருந்தார்.

சடலங்கள் பின்னால் இருந்தது தெரியாமல் அவரது ஆட்டோவில் சிலர் பயணமும் செய்துள்ளனர்.

புதன்கிழமை மதியம் வீடு திரும்பிய அவர், அங்கிருந்த தமது மற்ற இரண்டு பிள்ளைகளையும் அதிர்ஷ்டவசமாக ஒன்றும் செய்யவில்லை.

அவர்களை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் சடலங்களுடன் சரண் அடைந்தார் லக்‌ஷ்மிகாந்த்.

லக்‌ஷ்மிகாந்தின் மனைவி சில நாள்களுக்கு முன்னர் தமது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையினர் கூறினர்.

நான்கு நாள்களுக்கு முன்னர்தான் நான்கு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அவர்களின் பாட்டி வீட்டுக்குச் சென்று அவர்களை மகிழ்வித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!