உதய்பூர் கொலை: பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவர் கைது

உதய்பூர் கொலை: பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவர் கைது

2 mins read
92a67cd1-c1fe-4b6f-80f6-67a6ad5fb6d6
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்தி உள்ள உதய்­பூர் கொலை வழக்கு தொடர்­பில் இரு­வர் கைதாகி உள்­ள­னர். அவர்­களில் ரியாஸ் அட்­டாரி என்­ப­வ­ருக்கு பாகிஸ்­தா­னில் இயங்கி வரும் தவாத் இ இஸ்­லாமி என்ற பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்­புள்­ளது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

சில வாரங்­க­ளுக்கு முன்பு நபி­கள் நாய­கம் குறித்து பாஜக செய்­தித் தொடர்­பா­ள­ராக இருந்த நூபுர் சர்மா என்­ப­வர் அவ­தூ­றான கருத்­து­களைக் கூறி­யது இஸ்­லா­மி­யர்­கள் மத்­தி­யில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இதை­யடுத்து அவர் மீது பாஜக கட்­சித் தலைமை நட­வ­டிக்கை எடுத்­தது.

இந்­நி­லை­யில், நூபுர் சர்­மா­வுக்கு ஆத­ர­வாக ராஜஸ்­தான் மாநி­லம், உதய்­பூ­ரில் உள்ள தையல்­கடை உரி­மை­யா­ளர் கன்­னையா லால் என்­ப­வர் சமூக ஊட­கங்­களில் கருத்து தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், அவரை இரண்டு பேர் கழுத்தை அறுத்து படு­கொலை செய்­த­னர். இந்­தக் கொடூரச் செயலை காணொளி­யா­கப் பதிவு செய்து சமூக ஊடங்­களில் வெளி­யிட்­ட­னர்.

நூபுர் சர்­மா­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­த­தால் கன்­னை­யாவை கொன்­ற­தாக அவர்­கள் விளக்­கம் அளித்த நிலை­யில், தேசிய புல­னாய்வு முகமை இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக விசா­ரணை நடத்தி கொலை­யா­ளி­க­ளைக் கைது செய்­தது. அதன் பிறகு நடந்த விசா­ர­ணையில், கைதான ரியாஸ் அட்­டாரி கடந்த 2014ஆம் ஆண்டு பாகிஸ்­தா­னில் உள்ள கராச்சி நக­ருக்­குச் சென்று, அங்கு இயங்கி வரும் தவாத் இ இஸ்­லாமி என்ற பயங்­க­ர­வாத அமைப்­பி­ன­ரைச் சந்­தித்­தது தெரி­ய­வந்­துள்­ளது.

எனி­னும் அந்த அமைப்­பின் உத்­த­ர­வின் பேரில்­தான் கன்­னையா கொல்­லப்­பட்­டாரா என்­பது இன்­னும் உறு­தி­யா­க­வில்லை. கொலை வழக்கில் கைதாகி உள்ள ரியாஸ் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருபது ஆண்டுகளாகிவிட்டதும் தெரியவந்துள்ளது.