இந்தியாவில் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிக்கும்

இந்தியாவில் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிக்கும்

1 mins read
0aee56a0-36c6-4783-998c-173f42214ecc
-

புது­டெல்லி: எதிர்­வ­ரும் 2035ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வில் நகர்ப்­புற மக்­கள் தொகை சுமார் 675 மில்­லி­ய­னாக இருக்­கும் என ஐநா மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இதேவேளை­யில் சீனா­வில் இந்த எண்­ணிக்கை ஒரு பில்­லி­ய­னாக இருக்­கும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா நெருக்­க­டிக்­குப் பின்­னர் அனைத்­து­லக நகர்ப்­புற மக்­கள் தொகை மீண்­டும் அதி­க­ரிக்­கத் துவங்­கும் என்­றும் 2050ஆம் ஆண்டு, மேலும் 2.2 பில்லியன் பேர் இந்த எண்ணிக்கையில் இணைவார்கள் என்றும் ஐ.நா. தெரிவித்தது. இது தொடர்­பான அறிக்­கையை அம்­மன்­றம் புதன்­கிழமை வெளி­யிட்­டது.

2035ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வில் நகர்ப்­புற மக்­கள் தொகை விகி­த­மா­னது மொத்த மக்­கள் தொகை­யில் 43.2 விழுக்­கா­டாக இருக்­கும். இச்­ச­ம­யம் சீனா­வில் 1.05 பில்­லி­யன் பேர் நகர்ப்­பு­றங்­களில் வசிப்­பர். ஆசி­யா­வின் நகர்ப்­புற மக்­கள் தொகை 2.99 பில்­லி­ய­னாக இருக்­கும்.

கடந்த இரு­பது ஆண்­டு­களில் ஆசிய வட்­டா­ரத்­தில் சீனா­வும் இந்­தி­யா­வும் மிக வேக­மான பொரு­ளி­யல் வளர்ச்­சி­யைக் கண்­டுள்­ளன என்­றும் அதன் கார­ண­மாக வறு­மை­யில் உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை பெரு­ம­ளவு குறைந்­துள்­ளது என்­றும் ஐ.நா அறிக்கை தெரி­விக்­கிறது.