புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் புதிதாக 18,819 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது.
மேலும் 39 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 525,116 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் வரக்கூடிய விமானப் பயணிகளில் 2 விழுக்காட்டினருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் 1,109 பேருக்கு தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதேபோல் கர்நாடக மாநிலத்திலும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 1,109ஆக பதிவாகி உள்ளது.
நாட்டின் முதல் 'எம்ஆர்என்ஏ' வகை தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

