மகாராஷ்டிர முதல்வர் ஆனார் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர முதல்வர் ஆனார் ஏக்நாத் ஷிண்டே

2 mins read
49973707-8963-4579-b8c5-1ff8b1d926df
ஏக்நாத் ஷிண்டே. படம்: தகவல் ஊடகம் -

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வின் புதிய முதல்­வ­ராக ஏக்நாத் ஷிண்டே

நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என பாஜக முடிவு செய்துள்ளது.

முன்னதாக சிவ­சே­னா­வில் இருந்து விலகி தனிக்­கு­ழு­வாக செயல்­படும் அதி­ருப்தி எம்­எல்­ஏக்­கள் பாஜக ஆட்­சிக்கு ஆத­ரவு அளிக்க இருப்­ப­தா­கத் தக­வல்­ வெளியானது.

ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட திருப்பத்தை அடுத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.

முன்னதாக மகா­ராஷ்­டிர சட்­டப்­பே­ர­வை­யைக் கூட்டி தமக்­குள்ள பெரும்­பான்­மையை நிரூ­பிக்க வேண்­டும் என முன்னாள் முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­வுக்கு அம்­மா­நில ஆளு­நர் உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, வாக்­கெ­டுப்பு நடத்த தடை­வி­திக்­கக் கோரி உச்ச நீதி­மன்­றத்தை அணு­கியது சிவ­சேனா கட்சி. எனி­னும் உச்ச நீதி­மன்­றம் தடை ­வி­திக்க மறுத்­ததை அடுத்து, நேற்று முன்­தி­னம் முதல்­வர் பத­வி­யில் இருந்து விலகு­வ­தாக அறி­வித்­தார் உத்­தவ் தாக்­கரே. பின்னர் ஆளு­நரைச் சந்­தித்து பதவி வில­கல் கடி­தத்தை அவர் ஒப்­ப­டைத்­தார்.

சட்­டப்­பே­ர­வை­யில் நடை­பெறும் எண்­ணிக்கை விளை­யாட்­டில் தமக்கு விருப்­பம் இல்லை என்றும் சட்­ட ­மே­லவை உறுப்­பி­னர் பதவி­யில் இருந்து வில­கு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். துரோ­கி­கள் தம்மை முது­கில் குத்­தி­விட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், மீண்­டும் மக்­க­ளைத் திரட்டப் போவ­தா­க­வும் சிவ­சேனா ஆட்சி மீண்­டும் அமை­யும் என்­றும் கூறியுள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் பாஜ­க­வுக்கு 106 எம்­எல்­ஏக்­கள் உள்­ளனர். அதிருப்தி எம்எல்ஏக்­கள் 39 பேரும் 11 சுயேட்சை எம்­எல்­ஏக்­களும் ஆத­ரவு அளிக்­கும் பட்­சத்­தில் பாஜ­க­வுக்­குப் பெரும்­பான்மை பலம் கிடைக்­கும் எனக் கூறப்பட்டது.

இதற்­கி­டையே, அதி­ருப்தி எம்­எல்­ஏக்­க­ளுக்­குத் தலை­மை­யேற்­றுள்ள ஏக்­நாத் ஷிண்டே நேற்று மதி­யம் மும்பை வந்­த­டைந்­தார். பின்­னர் தேவேந்­திர ஃபட்­னா­விஸ் உள்­ளிட்ட பாஜ­க­வின் முக்­கிய நிர்­வா­கி­களை நேரில் சந்­தித்து ஆலோ­சனை நடத்­தி­னார்.

அதன் பிறகு பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவரும் ஆளுநரை சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்பார் என்று அறிவித்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ்.

மகா­ராஷ்­டி­ரா­வில் புதிய ஆட்சி அமை­யும் பட்­சத்­தில் தேவேந்­திர ஃபட்­னா­விஸ் முதல்­வரா­க­வும் ஏக்­நாத் ஷிண்டே துணை முதல்­வ­ரா­க­வும் பொறுப்­பு ஏற்பார்கள் என்று கூறப்பட்டது.