படிப்பை முடிக்கும் முன்பே ரூ.1.8 கோடி ஊதியத்துடன் வேலை

படிப்பை முடிக்கும் முன்பே ரூ.1.8 கோடி ஊதியத்துடன் வேலை

2 mins read
71637fcc-5049-4d14-9b62-da0a0f00e472
பிசாக் மொண்டல். படம்: தகவல் ஊடகம் -

கோல்­கத்தா: கணினி அறி­வியல் துறை­யில் நான்­காம் ஆண்டு படித்து வரும் மாண­வ­ருக்கு கூகல், அமே­சான், ஃபேஸ்புக் ஆகிய மூன்று பெரிய நிறு­வ­னங்­களில் இருந்து வேலை வாய்ப்பு தேடி­வந்துள்­ளது.

பிசாக் மொண்­டல் என்ற அந்த மாண­வர் கோல்­கத்­தா­வின் ஜாதவ்­பூர் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படித்து வரு­கி­றார். கடை­சிப் பருவத் தேர்வு எழுத வேண்­டி­யுள்­ளது. இந்­நிலை­யில், ஃபேஸ்புக் நிறு­வ­னம் இவ­ருக்கு ஆண்­டுக்கு ரூ.1.8 கோடி ஊதி­யம் தர முன்­வந்­துள்­ளது.

மேற்கு வங்­கத்­தில் சாதா­ரண குடும்­பத்­தில் பிறந்து வளர்ந்­த­வர் பிசாக் மொண்­டல். அவ­ரது தாயார் அங்­கன்­வாடி ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­று­கி­றார். சிறு வய­தில் இருந்தே படிப்­பில் கெட்­டிக்­கா­ர­ராக விளங்­கிய பிசாக், சிறந்த மதிப்­பெண்­க­ளைப் பெற்­ற­தால் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இடம் கிடைத்­துள்­ளது.

இன்று அந்­தப் பல்­க­லையில் படித்த மாண­வர்­களில், தொடக்­கத்­தி­லேயே அதிக ஊதியத்­து­டன் பணி­யில் சேரும் மாண­வர் என்ற பெரு­மைக்கு உரியவராக பிசாக் மொண்­டல் உள்­ளார்.

கொரோனா முடக்­க ­நி­லை­யின்­போது பல்­வேறு நிறு­வ­னங்­களில் பயிற்­சிக்­காக பணி­யாற்­றி­னார் பிசாக். அதன் மூலம் பாடத்திட்ட ஆய்­வு­க­ளுக்கு வெளியே அறிவைச் சேக­ரிக்­கும் வாய்ப்­பைப் பெற்­ற­தா­க­வும் அந்த அனு­ப­வங்­கள் நேர்­மு­கத் தேர்­வில் வெற்­றி­பெற உத­வி­யது என்­றும் கூறு­கி­றார்.

வரும் செப்­டம்­பர் மாதம் லண்­ட­னுக்கு பறந்து ஃபேஸ்புக் நிறு­வ­னத்­தில் இணைந்து பணி­யாற்ற உள்­ளார் பிசாக் மொண்­டல்.

"மூன்று பெரிய நிறு­வனங்களில் இருந்து முழு நேர வேலைக்­கான பணி நிய­மன ஆணை­க­ளைப் பெற்­றுள்­ளேன். எனி­னும் அதிக ஊதி­யம் வழங்­கி­ய­தன் கார­ண­மாக ஃபேஸ்புக் நிறு­வ­னத்தை தேர்ந்­தெ­டுத்­தேன்," என்­கி­றார் பிசாக் மொண்­டல். கடந்த ஆண்டு ஜாதவ்­பூர் பல்­கலைக்­க­ழக மாண­வர்­கள் 9 பேர் ஒரு கோடி ரூபாய் சம்­பளத்­திற்கு வேலை­வாய்ப்பை பெற்ற நிலை­யில், பிசாக் மொண்டல் அவர்கள் அனை­வ­ரை­யும் தற்போது பின்­னுக்குத் தள்­ளி­யுள்­ளார்.