இடாநகர்: இமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பள்ளி சிறார்கள் உட்பட 15 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த துயரச் சம்பவம் நேற்று காலை நிகழ்ந்தது.
நேற்று சூலு பகுதியில் பள்ளி சிறார்கள் உட்பட நாற்பது பேருடன் அந்த தனியார் பேருந்து சயிஞ் என்ற பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது அப்பேருந்து.
இதில் பேருந்தில் பயணம் செய்த சிறார்கள் உட்பட 15 உயிரிழந்தனர் என்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சூலு காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதையடுத்து மீட்புப்பணிகள் துரித கதியில் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் விபத்து நிகழ்ந்ததை உறுதி செய்தார்.
இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா இருநூறாயிரம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

