காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

1 mins read
a24f66c5-9165-48e1-81fc-83445540be51
-

பெங்­க­ளூரு: காவி­ரி­யில் நீர் மட்­டம் அதி­க­ரித்து வரு­வதை அடுத்து, கரை­யோர மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டது.

காவி­ரி­யாற்­றின் நீர்ப்­பி­டிப்­புப் பகு­தி­களில் கடந்த சில தினங்­க­ளாக தொடர்ந்து கன­மழை நீடித்து வரு­கிறது. இத­னால் காவி­ரி­யில் அவ்­வப்­போது வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டு­கிறது. கர்­நா­ட­கா­வில் உள்ள கே.ஆர்.எஸ். அணை அதன் முழு கொள்­ள­ளவை எட்­டி­யுள்ளது.

அணை­யில் இருந்து விநா­டிக்கு பத்­தா­யி­ரம் முதல் 25 ஆயி­ரம் கன­அடி நீர் வெளி­யேற்­றப்­பட வாய்ப்­புள்­ள­தாக அம்­மா­நில அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கர்­நா­ட­கா­வில் தென்­மேற்குப் பரு­வ­ம­ழை­யின் தாக்­கம் தீவி­ர­ம் அடைந்­துள்­ளது. குடகு, சிக்­மங்­களூர், ஹசன், மைசூர், மண்­டியா ஆகிய மாவட்­டங்­களில் தொடர்ந்து மழை நீடித்து வரு­கிறது. இவை எல்­லாம் காவிரி நீர்ப்­பி­டிப்­புப் பகுதி­க­ளா­கும். இதன் கார­ண­மாக கர்­நா­ட­கா­வில் உள்ள அணை­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

கேஆர்­எஸ், கபினி ஆகிய இரு அணை­க­ளுக்­கும் கடந்த சில தினங்­க­ளாக நீர்­வ­ரத்து தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. கேஆர்­எஸ் அணைக்கு 34,000 கன­அடி நீர் வந்­து­கொண்­டி­ருக்­கும் நிலை­யில், அங்­கி­ருந்து 3,200 கன­ அடி நீர் வெளி­யேற்­றப்­பட்டு வரு­கிறது.

அந்த அணை­யின் உய­ரம் 124.80 அடி­யா­கும். இந்­நி­லை­யில் நீர்­வ­ரத்து அதி­க­ரித்­துள்­ள­தால் அணை­யில் தற்­போது 121.42 அடி அள­வுக்கு நீர் இருப்பு உள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

எந்த நேரத்­தி­லும் அணை நிரம்பி­வி­டக்­கூ­டும் என்­ப­தால், உபரி நீர் வெளி­யேற்­றப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அணை நிரம்­பும் வரை காத்­தி­ருக்­கா­மல், காவிரி கரை­யோ­ரக் கிரா­மங்­களில் வசிக்­கும் பொதுமக்­கள் உட­ன­டி­யாக பாது­காப்­பான இடங்­க­ளுக்­குச் செல்­லு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.