'5ஜி' ஏலம்; அதானி, அம்பானி நிறுவனங்கள் போட்டி

'5ஜி' ஏலம்; அதானி, அம்பானி நிறுவனங்கள் போட்டி

1 mins read
6d8dc75e-d4c7-4c63-a11c-cedfd8645349
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் '5ஜி' தொலைத் தொடர்பு சேவை­க­ளுக்­கான அலைக்­கற்றை ஏலம் இம்­மா­தம் 26ஆம் தேதி நடை­பெ­று­கிறது.

இந்த ஏலத்­தில் அம்­பா­னி­யின் 'ஜியோ' நிறு­வ­னம், ஏர்­டெல், வோட­போன், ஐடியா போன்ற நிறு­வ­னங்­கள் பங்­கேற்க விண்­ணப்­பித்­துள்­ளன. தற்­போது அதானி குழு­ம­மும் இந்­தக் களத்­தில் குதித்து உள்­ளது. இது குறித்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "இந்­தி­யா­வில் அடுத்த தலை­முறை '5ஜி' சேவை­களை தொடங்­கத் தயா­ராகி வரும் நிலை­யில் அதற்­கான ஏலத்­தில் நாங்­களும் பங்­கேற்­கி­றோம்," என்று அதானி குழு­மம் தெரி­வித்து உள்­ளது.

விமான நிலை­யம், துறை­மு­கங்­கள், மின்­சா­ரப் பரி­மாற்­றம் உட்­பட பல்­வேறு செயல்­பா­டு­களில் மேம்­பட்ட இணை­யப் பாது­காப்­பு­டன் தனி­யார் இணை­யச் சேவை­களை வழங்­கு­வ­தற்­காக '5ஜி' அலைக்­கற்றை ஏலத்­தில் பங்­கேற்­ப­தா­க­வும் அது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளது.

இதன் மூலம் இந்­தி­யா­வின் முன்­னணி தொழி­ல­தி­பர்­க­ளான அதானி. அம்­பானி நிறு­வ­னங் களுக்கு இடையே போட்டி ஏற்­பட்டு உள்­ளது.