மகாராஷ்டிரா, தெலுங்கானாவில் மழை தீவிரம் அடையும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

2 mins read
449a372b-6c81-4e5e-9987-cc2c7a9ecb5c
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நீடித்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சூரத் நகரின் பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் வெள்ளம்போல் தேங்கி உள்ளது.படம்: ஊடகம் -

மும்பை: நாட்­டின் மேற்­குக்­க­ரை­யோர மாநி­லங்­களில் அடுத்த ஐந்து தினங்­க­ளுக்கு கன­மழை நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், தென்­மேற்­குப் பரு­வ­மழை கார­ண­மாக கோவா, கர்­நா­டகா, மகா­ராஷ்­டிரா, தெலுங்­கானா ஆகிய நான்கு மாவட்­டங்­களி­லும் சில தினங்­க­ளாக பலத்த மழை பெய்து வரு­கிறது.

இத­னால் அம்­மா­நி­லங்­க­ளின் பல்­வேறு பகு­தி­களில் பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­போல் வட மாநி­லங்­கள் சில­வற்­றி­லும் மழை­யின் தாக்­கம் குறைந்­த­பா­டில்லை.

அசாம் மாநி­லத்­தில் நீடித்து வரும் மழை கார­ண­மாக இது­வரை ஆறு லட்­சம் பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். மழை, வெள்­ளப்­பெருக்கு, நிலச்­ச­ரி­வில் சிக்கி பலி­யா­னோர் எண்­ணிக்கை 190ஆக அதி­க­ரித்­துள்­ளது.

டெல்லி, அரி­யானா மாநி­லங்­க­ளி­லும் கடந்த இரு தினங்­க­ளாக மழை நீடித்து வரு­கிறது.

காஷ்மீரின் அமர்நாத் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழை காரணமாக 17 பேர் மாண்டுவிட்டனர்.

இந்­நி­லை­யில், மகா­ராஷ்­டி­ரா­வி­லும் மழை தன் ஆட்­டத்தை தீவி­ர­மாக்கி உள்­ளது. அங்கு மழை, வெள்­ளம் கார­ண­மாக 130 கிரா­மங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. காட்­சி­ரோலி, ஹிங்­கோலி, நாண்­டெட், மாரத்­வாடா பகு­தி­கள் வெள்­ளத்­தால் சூழப்­பட்­டுள்ள நிலை­யில், அங்கு மழை நீடிக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மழைக்கு இது­வரை 76 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

மாநி­லம் முழு­வ­தும் 35 நிவா­ரண முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக­வும் வெள்­ளத்­தில் சிக்­கிய 4,917 பேர் மீட்­கப்­பட்டு அம்­மு­காம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் மகா­ராஷ்­டிர பேரி­டர் மேலாண்மைத் துறை தெரி­வித்­துள்­ளது.

மேலும், அம்­மா­நி­லத்­தில் 125 கால்­ந­டை­கள் இறந்­துள்­ளன. 838 வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ளன. தலை­ந­கர் மும்­பை­யில் மீட்பு, நிவாரணப் பணி­கள் துரித கதியில் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தெலுங்­கானா மாநி­லத்­தில் மழை தீவி­ர­ம­டைந்­துள்­ள­தால் முதல் மூன்று நாள்­க­ளுக்கு பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜெய­சங்­கர் பூபல்­பள்ளி, நிசாம்­பாத், ராஜண்ணா மாவட்­டங்­களில் கடும் மழை பெய்து வரும் நிலை­யில், பல மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. பொது­மக்­கள் தகுந்த கார­ணங்­கள் இன்றி வீடு­களை விட்டு வெளியே வர வேண்­டாம் என முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­தார்.

வெள்ள பாதிப்பு, மீட்­புப் பணி­கள் குறித்து அரசு உய­ர­தி­காரி­க­ளு­டன் தீவிர ஆலோ­சனை மேற்­கொண்ட முதல்­வர், தாழ்­வான பகுதி­களில் மேற்­கொள்ள வேண்டிய வெள்­ளத் தடுப்பு, மீட்­புப் பணி­கள் குறித்து பல்­வேறு உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்­துள்­ளார்.