புதுடெல்லி: ஊதிய உயர்வு அளிக்குமாறு கோரி வரும் இண்டிகோ விமான நிலைய ஊழியர்கள் பலர் மொத்தமாக மருத்துவ விடுப்பில் சென்றதால், அந்நிறுவனத்தின் நிர்வாகத் தரப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுநர்கள் நேற்று முன்தினம் பணிக்கு வருவதைத் தவிர்த்துள்ளனர். டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.
ஹைதராபாத்தில் மொத்தமுள்ள 25 தொழில்நுட்ப வல்லுநர்களில் 22 பேர் மட்டுமே வந்திருந்த போதிலும், விமானச் சேவைகள் இதனால் பாதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை அந்நிறுவனத்தின் 75 விழுக்காடு விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டன.
முன்னதாக, கடந்த வாரம் ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்க இண்டிகோ நிறுவன ஊழியர்கள் பலர் மொத்தமாக விடுப்பு எடுத்துச் சென்றதால் விமானச் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, இண்டிகோ நிர்வாகத்துக்கு அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

