அடங்காத கொந்தளிப்பு, அசராத இலங்கை மக்கள்

அடங்காத கொந்தளிப்பு, அசராத இலங்கை மக்கள்

1 mins read
9c7907b2-0bc3-4bbf-85cc-d44fd7e954f0
பிரதமர் அலுவலகம் முன்பு நேற்று கூடி ஆர்ப்பாட்டம் ெசய்தவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. படம்: இபிஏ -

கொழும்பு: உறுதி அளித்­த­படி அதி­பர் பத­வி­யி­லி­ருந்து கோத்­த­பாய ராஜபக்சே வில­கா­த­தால் இலங்கை பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின் முன்பு நேற்று பேரள­வில் ஒன்­று­தி­ரண்ட மக்­கள் அர­சாங்க எதிர்ப்பு முழக்­கங்­களை எழுப்­பி­னர்.

தற்­கா­லிக அர­சாங்­கத் தலை­

வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ரணில் விக்­ர­ம­சிங்கே தமது பிர­த­மர் பொறுப்­பை­யும் கைவி­ட­வேண்­டும் என்று அவர்­கள் விண்­ண­திர முழக்­க­மிட்­ட­னர்.

பிர­த­ம­ரின் அலு­வ­ல­கத்­தைச் சுற்றி முற்­று­கை­யிட்ட அவர்கள், அலு­வ­ல­கத்­தின் உச்சி வரை ஏறிச் சென்று ஆர்ப்­பாட்­டம் செய்­த­னர்.

மாலத்­தீ­வுக்குத் தப்­பிச் சென்ற இலங்கை அதி­பர் கோத்­த­பாய நேற்று பதவி வில­கு­வ­தாக முன்­னர் அறி­வித்து இருந்­தார். நாடா­ளு­மன்ற சபா­நா­ய­க­ரும் பதவி வில­கல் கடி­தம் நேற்று பிற்­ப­க­லில் வரும் என்று கூறி­யி­ருந்­தார்.

ஆனால் அதற்­குப் பதில் பிர­த­மர் ரணில் விக்­ர­ம­சிங்­கேயை தற்­கா­லிக அர­சாங்­கத் தலை­வர் அல்­லது தற்­கா­லிக அதி­ப­ராக கோத்­த­பாய நிய­மித்­த­தாக அறி­விப்­பு­கள் வெளி­யா­யின.

அதி­பர் உடல்­நிலை சரி­யில்­லாத நேரத்­தில் அல்­லது அவர் நாட்­டில் இல்­லாத நேரத்­தில் அதி­ப­ரின் குறிப்­பிட்ட சில அதி­கா­ரங்­களை தற்­கா­லிக அதி­பர் நிறை­வேற்­ற­லாம்.

ஏற்­கெ­னவே ரணில் விக்­ர­ம­சிங்கே பிர­த­மர் பத­வி­யை­விட்டு விலக வேண்­டும் என்று கோரிக்கை விடுத்து வந்த மக்­க­ள், அவர் தற்­கா­லிக அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்­ட­தும் அதி­க­மா­கக் கொந்­த­ளித்­த­னர்.

பிர­த­மர் அலு­வ­லக முற்­று­கை­யின்­போது நேற்று 20க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­தாகத் தெரி விக்கப்பட்டது.