ரணிலுக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லை: முன்னாள் அதிபர் சிறிசேன

ரணிலுக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லை: முன்னாள் அதிபர் சிறிசேன

1 mins read
67e2a715-297f-422c-8c5e-1900b23a94f5
-

கொழும்பு: நாட்டை மேன்­மே­லும் நெருக்­க­டிக்­குள்­ளாக்­கா­மல் மக்­க­ளின் விருப்­பத்­திற்கு மதிப்­ப­ளித்து அதி­ப­ரும் பிர­த­ம­ரும் பதவி வில­க­வேண்­டும் என முன்­னாள் இலங்கை அதி­பர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பாக நேற்று அவர் ஓர் அறிக்கை வெளி­யிட்­டார்.

அதில், "இலங்கை வர­லாற்­றில் இடம்­பெ­றாத நிகழ்­வு­கள் நாட்­டில் தற்­போது இடம்­பெ­று­கின்­றன. அதி­கா­ரத்­தின் மீது பேராசை கொண்ட தர­ப்பி­ன­ரால் நாடு முழு­மை­யாக சீர­ழிந்­துள்­ளது. தப்­பி­யோ­டிய அதி

­ப­ருக்­கும் தற்­போ­தைய தற்­கா­லிக அதி­ப­ருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கும் அதி­கா­ரம் கிடை­யாது. இவர்­க­ளின் உத்­த­ர­வு­க­ளைச் செயல்­ப­டுத்­தும்­போது பாது­காப்­புப் படை­யி­னர் பல­முறை சிந்­திக்க வேண்­டும். நாட்டை தொடர்ந்து நெருக்­க­டிக்­குள்­ளாக்­கா­மல் அதி­ப­ரும் பிர­த­ம­ரும் பதவி விலக வேண்­டும்," என்று கூறினார்.