கொழும்பு: இலங்கையின் பொருளி யல் சீரழிவுக்கு ராஜபக்சே சகோதரர் களின் நிர்வாக முறைகேடே காரணம் என்பது உலகறிந்தது. 2019 அதிபர் தேர்தலுக்குப் பின்னர் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் அந்தக் குடும்பத்தின் பிடியில் இலங்கை சிக்கி இருந்தது.
அதிபராக கோத்தபாயவும் பிரதமராக அவரது அண்ணன் மகிந்தவும் பதவி வகித்ததோடு, முக்கியதுறைகளில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
எந்த மக்களால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அதே மக்களின் எதிர்ப்பால் நாட்டைவிட்டே ஓடும் நிலைமை கோத்தபாயவுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிபர் மாளிகையை ஆக்கிரமித்து இருக்கும் அரசாங்க எதிர்ப்பாளர்களிடம் ஊடகங்கள் கருத்துத் திரட்டின.
"கோத்தபாய தப்பிச் சென்றதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அவர் சிறையில்அடைக்கப்பட்டு இருக்கவேண்டும்," என்றார் 25 வயது மாலிக் டி'சூசா.
மகிந்த ராஜபக்சே
2004-05 ஆண்டில் பிரதமர் பதவி வகித்த மகிந்த ராஜபக்சே, 2005 முதல் தொடர்ந்து 10 ஆண்டு கள் அதிபராக இருந்தார். 2009 உள்நாட்டுப் போரில் கிட்டத்தட்ட 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டது இவரது ஆட்சியில்தான்.
மகிந்த தமது சொந்தத் தொகுதி யான அம்பாந்தோட்டையில் துறைமுகம், விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டபோது அதற்கு நிதி உதவி செய்ய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முன்வராத நிலையில் அதற்கான நிதியில் 85% சீனா கடனாக வழங்கியது.
2014ல் இவரும் சீன அதிபரும் ஆகப்பெரிய பொருளியல் நகரம் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்விரண்டு அம்சங்களும் இலங்கையின் பொருளியல் நெருக்கடிக்கு ஆரம்பப் புள்ளியாகப் பார்க்கப்பட்டது. சீனா
விடம் பெற்ற கடன்தொகையில் பேரளவை ராஜபக்சே குடும்பம் எடுத்துக்கொண்டதாக இப்போது ஊடகங்களில் தகவல் கசிகிறது.
'தி டெர்மினேட்டர்'
2019ல் அதிபர் பதவி ஏற்ற கோத்தபாய, 'தி டெர்மினேட்டர்', `இலங்கையின் இரும்பு மனிதர்' என அவரது கட்சியினரால் அழைக்கப்பட்டார்.
தேவையற்ற பாதுகாப்பு நட
வடிக்கைகளை இவர் மேற்கொண்டதால் நாட்டின் நிதிப்பற்றாக்குறை மேலும் அதிகரித்ததாக இலங்கை பொருளியல் நிபுணர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
பசில் ராஜபக்சே
மகிந்த, கோத்தபாய இருவருக்கும் இளையவரான பசில் ராஜபக்சே நிதியமைச்சராக இருந்தார். இவர், இலங்கையின் முக்கியத் திட்டங்களில் ஊழல் செய்து கோடிக்
கணக்கில் பணம் சேர்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கோத்தபாய அதிபர் ஆவதற்கு முன்னரே பல மோசடி வழக்குகளில் இவர் சிக்கியிருந்ததாகவும் பின்னர் அத்தனை வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சமல் ராஜபக்சே
ராஜபக்சே குடும்பத்தின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சே, கோத்தபாய அரசில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார்.
"சமல் ராஜபக்சே மக்களுக்காக எதையுமே செய்ததில்லை. ஊழலில் ஈடுபட்டு பணம் சேர்ப்பதும் பதவிகளைத் தக்கவைப்பதுமே அவருக்கு முக்கியம்," என்று இலங்கை ஊடகங்கள் சில கூறின.
நமல் ராஜபக்சே
மகிந்தவின் மூத்த மகன்தான் நமல் ராஜபக்சே. இளைஞர் மேம்பாடு, விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தார் நமல். 24 வயதிலேயே எம்.பி. ஆனார். அப்போதே ஊழல், ஹவாலா மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கினார்.

