புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி திறந்துவைத்த தேசிய சின்னத்தின் வடிவத்தை எதிர்க்கட்சிகள் குறைகூறி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ரஞ்சன் சௌத்ரி, "சாரநாத்தில் உள்ள சிலையில் இருக்கும் சிங்கங்களின் உருவத்தைப்போல இது இல்லை. மாற்றுங்கள்," என்று தமது டுவிட்டரில் கூறியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜவகர் சர்க்கார், "தேசிய சின்னமான கண்ணியமிகு அசோகர் சிங்கங்களுக்கு அவமதிப்பு நேர்ந்துள்ளது.
"சிங்கங்கள் சீற்றத்துடனும் பொருத்தமின்றியும் காணப்படுகின்றன," என்றார்.

