மும்பை: தொடர்ந்து பெய்துவரும் கனமழையாலும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தாலும் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 89 பேர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் உயியிர்ச்சேதமும் பொருள் சேதமும் அதிகரித்து வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, தானே, நாசிக், புனே, நாக்பூர் உட்பட 27 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் 249 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன நால்
வரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
கனமழை, வெள்ளத்தால் 1,368 வீடுகள் சேதமடைந்துவிட்டன. நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

