மழை: மகாராஷ்டிராவில் 89 பேர் மரணம், 1,300 வீடுகள் சேதம்

மழை: மகாராஷ்டிராவில் 89 பேர் மரணம், 1,300 வீடுகள் சேதம்

1 mins read
c12f773d-47f9-4fac-ad6a-eae8cb166293
-

மும்பை: தொடர்ந்து பெய்­து­வ­ரும் கன­ம­ழை­யா­லும் பெருக்­கெ­டுத்து ஓடும் வெள்­ளத்­தா­லும் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் இது­வரை 89 பேர் உயி­ரி­ழந்து விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தென்­மேற்­குப் பரு­வ­மழை கார­ண­மாக மகா­ராஷ்­டிரா, மத்­தி­யப் பிர­தே­சம், குஜ­ராத் உள்­ளிட்ட மாநி­லங்­களில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­கிறது. சில இடங்­களில் நிலச்­ச­ரி­வு­களும் ஏற்­பட்டு வரு­கின்­றன. இத­னால் உயி­யிர்ச்­சே­த­மும் பொருள் சேத­மும் அதி­க­ரித்து வரு­கின்­றன.

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் மும்பை, தானே, நாசிக், புனே, நாக்­பூர் உட்பட 27 மாவட்­டங்­களில் கடந்த ஒரு வார­மாக பெய்து வரும் கன­ம­ழை­யால் 249 கிரா­மங்­கள் தண்­ணீரில் தத்­த­ளிக்­கின்­றன.

கடந்த 24 மணி­நே­ரத்­தில் ஐவர் உயி­ரி­ழந்த நிலை­யில், மழை வெள்­ளத்­தில் சிக்கி பலி­யா­னோ­ரின் எண்­ணிக்கை 89ஆக அதி­க­ரித்­துள்­ளது. காணா­மல் போன நால்­

வ­ரைத் தேடும் பணி நடை­பெற்று வரு­கின்­றது.

கன­மழை, வெள்­ளத்­தால் 1,368 வீடு­கள் சேத­ம­டைந்­து­விட்­டன. நிவா­ரண முகாம்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு மக்­கள் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். வெள்­ளத்­தில் சிக்­கி­ய­வர்­களை மீட்­கும் பணி­யில் தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யி­னர் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.