உலக அழகி சுஷ்மிதா சென்னுடன் 'ஐபிஎல்' முன்னாள் தலைவர் லலித் மோடி உல்லாசம்
புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முதல் தலை வரான லலித் மோடி, 56, பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன், 46, டேட்டிங்கில் இருப்பதாக அதிகாரபூர்வமாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் பதிவுகளில் அறவித்துள்ளார். கடந்த 1994ல் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் பெற்ற உலக அழகி யான சுஷ்மிதா சென்னுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
"சுஷ்மிதா சிறந்த பார்ட்னர், இப்போது டேட்டிங்கில் இருக்கிறோம். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதுவும் ஒரு நாள் நடந்துவிடலாம்," என்று தமது பதிவுகளில் லலித் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு சுஷ்மிதா சென் தனது இளம் வயது காதலன் ரோஹ்மானை பிரிவதாக இன்ஸ்டகிராம் மூலம் அறிவித்தார். "நாங்கள் நண்பர்களாகத் தொடங்கினோம், நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம். நீண்ட கால உறவு முடிந்தது. ஆனால் காதல் உள்ளது," என்று கூறியிருந்தார்.
சுஷ்மிதா சென் 1994ல் 'பிரபஞ்ச' அழகி பட்டத்தை வென்றவர். அதிகளவில் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள நடிகை சுஷ்மிதா சென், தமிழில் 1997ல் வெளியான ரட்சகன் படத்தில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல்வன் படத்தில் இடம்பெற்ற 'சக்கலக்கா பேபி' பாடலுக்கு அவர் நடனம் ஆடியிருந்தார்.
ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன்முதலாகப் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர். தற்போது இவருக்கு 46 வயதாகிறது. இரண்டு குழந்தை களை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான லலித் மோடி அதன் முதல் தலைவராக இருந்தார். இந்தப் போட்டி உள்பட பல்வேறு பண மோசடி தொடர்பில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் லலித் மோடி லண்டன் தப்பிச் சென்றார்.
கடந்த 2009ல் ஒளிபரப்பு உரிமை வழங்குவதில் அவர் மோசடி செய்ததாகவும் சட்டவிரோத பணப் பரி வர்த்தனையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இதன் தொடர்பில் 2012ல் இவர் மீது வழக்கு பதி வானது. இந்த வழக்கில் அவர் ஒத்துழைக்க மறுத்ததால் மும்பை சிறப்பு நீதிமன்றம் அவர் வெளி வர முடியாதபடி கைது ஆணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டது.
லலித் மோடிக்கு ஏற்கெனவே மினால் என்பவருடன் திருமணமாகி விவாகரத்து ஆகி தனியாக வசித்து வந்தார். இந்தத் திருமணத்தின் மூலம் ஆலியா மோடி என்ற மகளும் ருச்சிர் மோடி என்ற மகனும் அவருக்கு உள்ளனர்.

