இலங்கையில் ஆடல், பாடல் கொண்டாட்டம்

இலங்கையில் ஆடல், பாடல் கொண்டாட்டம்

1 mins read
f8282223-67f0-45f9-86c0-80afbe8d2f94
ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று இனிப்பு செய்து விநியோகித்தனர். படம்: ஏஎஃப்பி -

கொழும்பு: சிங்­கப்­பூர் தப்­பிச் சென்ற கோத்­த­பாய ராஜ­பக்சே, அதி­பர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தார். அவ­ரது வில­கல் கடி­தத்தை இலங்கை நாடா­ளு­மன்ற நாய­கர் மகிந்த யாப்பா ஏற்­றுக்­கொண்­ட­தால் நாட்­டில் மக்­களும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களும் ஆடி, பாடி மகிழ்ந்­த­னர்.

'கோத்தா வீட்­டுக்­குப் போ' என்ற முழக்­கத்­தோடு பல மாதங்­க­ளா­கப் போராட்­டம் நடத்­தி­ய­வர்­கள் தற்­போது வெற்­றி­யைக் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

"எனக்கு மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது. இதே போன்ற உணர்­வு­தான் மற்­ற­வர்­க­ளுக்­கும் இருக்­கும்," என்று ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் பேசிய சமூக ஆர்­வ­ல­ரான விரே பல்­தா­ஸர் தெரி­வித்­தார்.

சிலர் இனிப்­பு­களைத் தயா­ரித்து விநி­யோ­கித்து, சுவைத்து மகிழ்ச்சி அடைந்­த­னர். ஒரு­வர், பாது­காப்­புக்கு நின்று இருந்த காவ­ல­ருக்கு இனிப்பு கொடுக்க. அவர் புன் சிரிப்­பு­டன் வேண்­டாம் என மறுத்­து­விட்­டார். ராணுவ வீரர்­க­ளுக்­கும் சிலர் இனிப்பு கொடுத்து கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி வில­கலை கொண்­டா­டி­னர்.

கோத்­த­பாய பதவி வில­கி­ய­தைத் தொடர்ந்து இலங்­கை­யில் ராஜ­பக்­சேக்­க­ளின் சாம்­ராஜ்ஜியம் முடி­வுக்கு வந்து உள்­ளது.

கடந்த இரு­பது ஆண்­டு­க­ளுக்கு மேலாக ராஜ­பக்சே சகோ­த­ரர்­க­ளின் பிடி­யில் இலங்கை இருந்­தது. ஏற் கெனவே பிர­த­ம­ராக இருந்த மகிந்த ராஜ­பக்­சே­யும் நிதி அமைச்­ச­ராக இருந்த பசில் ராஜ­பக்­சே­யும் பதவி வில­கி­விட்­ட­னர். இரு­வ­ரும் இன்­ன­மும் இலங்­கை­யில் உள்­ள­னர்.