செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
030211a1-0ad7-4a64-b0f3-fe0338697a1e
-

முதல் குரங்கம்மை சம்பவம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் முதல் குரங்­கம்­மை சம்­ப­வம் பதி­வா­கி­யுள்­ளது. ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­களில் இருந்து கேர­ளா­வுக்கு வந்த நபர் ஒரு­வ­ருக்கு குரங்­கம்மை நோய் பாதிப்பு அறி­கு­றி­கள் காணப்­பட்­டதைத் தொடர்ந்து, அவர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

அவ­ரது ரத்த மாதிரி புனே ஆய்­வ­கத்­திற்கு அனுப்­பப் பட்டு சோதிக்­கப்­பட்­ட­தில் அவ­ருக்கு குரங்­கம்மை பாதிப்பு உறு­திப்­படுத்தப்பட்டது என கேரள அமைச்­சர் வீணா ஜார்ஜ் தெரி­வித்­துள்­ளார். குரங்­கம்­மை­யால் பாதிக்­கப்­பட்ட நபர் நல்ல உடல்­ ந­லத்துடன் இருப்­ப­தா­க­வும் அவர் சொன்னார். இதற்­கி­டையே அவ­ரு­டன் தொடர்­பில் இருந்த 11 நபர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர்.

காமராஜருக்கு மோடி புகழாரம்

புது­டெல்லி: முன்­னாள் தமி­ழக முதல்­வரான பெருந் தலைவர் காம­ரா­ஜ­ரின் பிறந்­த­நா­ளை­யொட்டி பிர­த­மர் மோடி உட்­பட அனைத்துக் கட்சி தலை­வர்­களும் அவ­ருக்குப் புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ள­னர். பிர­த­மர் தமது டுவிட்­டர் பதி­வில், இந்­திய சுதந்­திரப் போராட்­டத்­தில் காம­ரா­ஜ­ரின் பங்­க­ளிப்பு மறக்க முடி­யா­தது, அவர் கனி­வும், அக் ­க­றை­யும் கொண்ட சிறந்த நிர்­வாகி. ஏழ்­மையை ஒழிக்­க­வும் மக்­க­ளின் துயரைப் போக்­க­வும் கடி­ன­மாக உழைத்­தார், சுகா­தா­ரம் மற்­றும் கல்­வியை மேம்­ப­டுத்துவதில் அவர் கவ­னம் செலுத்தியவர் என்று தெரி­வித்­துள்­ளார்.

டெல்லியில் சுவர் இடிந்து

விழுந்து ஐவர் உயிரிழப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று காலை அந்த கட்டடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

10 பேர் மீட்கப்பட்ட நிலையில் அதில் படுகாயம் அடைந்த ஒன்பது பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. கட்டுமான விபத்து குறித்து டெல்லி காவல்துறை விசாரித்து வருகிறது.

விமானத்தில் கோளாறு

புதுடெல்லி: டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் வதோதரா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தின் இயந்திரத்தில் அதிர்வு ஏற்பட்டதால் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பிவிடப்பட்டது. இண்டிகோ '6E-859; விமானத்தை இயக்கிய விமானிகள் விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை ஜெய்ப்பூருக்கு திசை திருப்பப்பட்டது. இரவு 8.30 மணியளவில் விமானம் ஜெய்ப்பூர் சென்றடைந்தது. விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். கோளாறு குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விசாரித்து வருகிறது.