விஜயவாடா: ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா நகரில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும்
செய்தியாளரான தமராஜூவின் வாழ்க்கைப் பயணம் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் இந்தியத் துணை அதிபர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியத் தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேற்கொண்ட தியாகங்களை நினைவுகூர்ந்தார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் முயற்சிகளைச் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்
கட்டுரைகள் மூலம் வெளியிட்டு, இந்தியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி இளைய தலை
முறையினருக்கு தெரியும்படி செய்யுங்கள் என அவர் ஊடக நிறு
வனங்களை கேட்டுக்கொண்டார்.
"வறுமை, கல்வியறிவின்மை, சமூக வேற்றுமை மற்றும் பெண்
களுக்கு எதிரான கொடுமைகள் ஆகியவை இல்லாத இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் போராட வேண்டும். நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்
களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் வகையில் இதனை மேற்கொள்ள வேண்டும்," என்று அவர் இளையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
எந்தவொரு கலாசாரம், சமயம் அல்லது மொழியைச் சிறுமைப்
படுத்துவது இந்திய பண்பாடு கிடையாது என வலியுறுத்திய அவர், இதுபோன்று, இந்தியாவைப் பலவீனமடைய செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிக்கும் பொறுப்பு ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உண்டு என்றார். அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நாட்டில் பிரிவினை செயல் திட்டங்களால், இந்தியாவின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ள சக்திகளிடம்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணை அதிபர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

