புதுடெல்லி: இந்திய அதிபர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் மாநிலம்தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர். இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழுவினர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில், அதிபர் தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பதாக கூறியது.
அதன்படி, யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

