யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு

யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு

1 mins read
996e4df0-64dc-49a0-a335-03831cb7fbdb
-

புது­டெல்லி: இந்­திய அதி­பர் தேர்­த­லில் ஆளும் தேசிய ஜன­நா­யக கூட்­டணி சார்­பில் திரௌ­பதி முர்­மு­வும் எதிர்க்­கட்­சி­கள் சார்­பில் யஷ்­வந்த் சின்­ஹா­வும் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

அவர்­கள் மாநி­லம்­தோ­றும் சென்று தங்­க­ளுக்கு ஆத­ரவு திரட்டு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், நாளை நடை­பெ­ற­வுள்ள அதிபர் தேர்­த­லில் யாருக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பாக ஆம் ஆத்மி கட்சி நேற்று முக்­கிய ஆலோ­சனை நடத்­தி­யது. இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் அக்­கட்­சி­யின் அர­சி­யல் விவ­காரக் குழு­வி­னர் கலந்­து­கொண்­ட­னர். கூட்­டத்­தின் முடி­வில், அதி­பர் தேர்­த­லில் தங்­க­ளின் ஆத­ரவு யாருக்கு என்­பதை ஆம் ஆத்மி கட்சி அறி­விப்­ப­தாக கூறி­யது.

அதன்­படி, யஷ்­வந்த் சின்­ஹா­வுக்கு ஆத­ரவு அளிப்­ப­தாக ஆம் ஆத்மி கட்சி தெரி­வித்­துள்­ளது.