அசுத்தமான குடிநீரால் ஆறு பேர் உயிரிழப்பு

1 mins read
b8079585-4178-4ca5-bf66-12a08c38bd62
-

புவ­னேஸ்­வர்: திறந்தவெளி­யில் இருந்த அசுத்­த­மான குடி­நீரை குடித்த ஆறு பேர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் ஒடி­சா­வில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அங்குள்ள ரய­கடா மாவட்­டத்­தில் உள்ள சில கிரா­மங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் அந்­தக் குடி­நீர் மாச­டைந்­துள்­ளதை அறி­யா­மல் அதை குடித்து வந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், 80 பேருக்கு உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. அவர்­களில் சிகிச்சை பல­னின்றி ஆறு பேர் மாண்­டு­விட்­ட­னர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.