கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உதவ நீதிமன்றம் உத்தரவு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உதவ நீதிமன்றம் உத்தரவு

1 mins read
5127d041-0a7f-441c-accf-ee1f8aa63995
-

புது­டெல்லி: கொரோ­னா­வால் பலி­யா­ன­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு உட­ன­டி­யாக நிவா­ர­ணம் வழங்க வேண்­டும் என மாநில அர­சு­க­ளுக்கு உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கொரோனா தொற்­றுப் பாதிப்­பால் இறந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு வழங்க வேண்­டிய நிவா­ர­ணத் தொகையை ஆந்­திர மாநில அரசு தனது வறட்சி நிவா­ரண திட்­டத்­துக்கு மாற்­றி­ய­தாக அண்­மை­யில் தக­வல் வெளி­யா­னது. இதற்கு எதிர்ப்­பும் கிளம்­பி­யது.

ஆந்­திர அர­சின் இம்­மு­டிவை எதிர்த்து உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டது.

அந்த மனுவை உச்ச நீதி­மன்ற நீதி­பதி எம்.ஆர்.ஷா தலை­மை­யி­லான அமர்வு விசா­ரித்­த­போது, ஆந்­திர அரசு சார்­பில் முன்­னி­லை­யான மூத்த வழக்­க­றி­ஞர் ஆர்.வசந்த், 'கொரோ­னா­வால் இறந்த நான்கு குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டா­மல் இருந்த நிவா­ர­ணத் தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது' எனத் தெரி­வித்­தார்.

அப்­போது குறுக்­கிட்ட நீதி­ப­தி­கள் இந்­தத் தக­வலை பதிவு செய்து கொண்­ட­தாக தெரி­வித்­த­னர்.

அதே­ச­ம­யம் கொரோனா நிவா­ர­ணத்­தொகை வறட்சி நிதிக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தால் அதனை இரு தினங்­க­ளுக்­குள் பேரி­டர் மேலாண்மை நிதிக்கு ஆந்­திர அரசு மாற்ற வேண்­டும் என்­றும் ஏற்­கெ­னவே வழங்­கிய தீர்ப்­பின்­படி, கொரோ­னா­வால் இறந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு வழங்க வேண்­டிய நிவா­ர­ணத் தொகையை மாநில அர­சு­கள் உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என்­றும் நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­ட­னர்.