கேரள முதல்வரைக் கொல்ல சதி

கேரள முதல்வரைக் கொல்ல சதி

1 mins read
f023af63-0795-4009-83b4-82f19344cc76
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள முதல்­வர் பின­ராயி விஜ­ய­னைச் சென்ற மாதம் விமா­னத்­தில் கொல்­லச் சதித் திட்­டம் தீட்­டி­ய­தாக சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­ன­ரும் இளை­ஞர் காங்­கி­ரஸ் மாநில துணைத் தலை­வ­ரு­மான சப­ரி­நாதன் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

திரு­வ­னந்­த­பு­ரம் தங்­கக் கடத்­தல் விவ­கா­ரத்­தில் முதல்­வ­ருக்­கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கும் தொடர்பு இருப்­ப­தா­கக் கூறப்­பட்ட நிலை­யில், சென்ற மாதம் முதல்­வர் பின­ராயி கண்­ணூ­ரில் இருந்து இண்­டிகோ விமா­னம் மூலம் திரு­வ­னந்­த­பு­ரம் சென்­றார்.

அப்­போது அவ­ருக்கு எதி­ராக இளை­ஞர் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் போராட்­டம் நடத்­தி­னர். இது தொடர்­பான விசா­ர­ணைக்கு வரும்­படி காவல்­துறை அறிக்கை அனுப்­பி­யதால் நேரில் சென்ற சபரிநாதன் இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரியிருந்தார். இது தொடர்பான விசாரணையின்போது சப­ரி­நா­த­னைக் கைது செய்­தி­ருப்­ப­தா­கக் காவல்­துறை, திருவனந்தபுரம் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தது.