வங்கி மோசடிகள் 50 விழுக்காடு சரிவு

வங்கி மோசடிகள் 50 விழுக்காடு சரிவு

1 mins read
28d7373c-efb9-4d6f-976f-b81a23526146
-

புது­டெல்லி: நாட்­டில் சென்ற ஆண்டு வங்கி மோச­டி­கள் ஏறத்­தாழ 50 விழுக்­காடு குறைந்­த­தாக மத்­திய நிதித் துணை­ய­மைச்­சர் பாக­வத் கராட் தெரி­வித்­துள்­ளார்.

வங்கி மோசடி தொடர்­பில் மாநி­லங்­க­ள­வை­யில் கேள்வி எழுப்­பப்­பட்­டது. எழுத்­து­பூர்­வ­மாக அதற்­குப் பதி­ல­ளித்த துணை­ய­மைச்­சர் இவ்­வாறு கூறி­னார்.

இந்­தி­யா­வில், 2020-2021 நிதி­யாண்­டில் பதி­வான வங்கி மோச­டி­க­ளின் எண்­ணிக்கை 4,680. சென்ற நிதி­யாண்­டில் இது 2,369ஆகக் குறைந்­தது என்­றார் அவர். மோசடி செய்­யப்­பட்ட தொகை­யும் குறைந்­ததை துணை­ய­மைச்­சர் சுட்­டி­னார். சென்ற நிதி­யாண்­டில் 3,204 கோடி ரூபாய் மோசடி செய்­யப்­பட்­டது. அதற்கு முந்­தைய நிதி­யாண்­டில் 7,306 கோடி ரூபாய் மோசடி செய்­யப்­பட்­டது என்­றார் அவர்.

வங்கி மோச­டி­க­ளைக் கையாள மேம்­பட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டதே இதற்­குக் கார­ணம் என்று கூறப்­பட்­டது.