இடாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பாரதியார் இயற்றிய 'பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாடலைப் பாடியதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான டுவிட்டர் பதிவில், சகோதரிகள் பாடியதைக் கேட்டு தாம் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "ஒரே இந்தியா என்ற உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள இளம் நட்சத்திரங்களுக்குப் பாராட்டுகள்," என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

