'சீனாவிடம் பெற்ற கடன்கள் இலங்கையை மூழ்கடித்தன'

'சீனாவிடம் பெற்ற கடன்கள் இலங்கையை மூழ்கடித்தன'

1 mins read
6b0d912e-6054-4405-b938-dea1c1e64196
-

கொழும்பு: சீனா­வி­டம் இருந்து அதிக அள­வில் கடன் வாங்­கி­ய­தன் கார­ண­மாக இலங்­கை­யின் பொரு­ளி­யல் பெரும் சரி­வைக் கண்­டுள்­ள­தாக அமெ­ரிக்க புல­னாய்வு முகமை தெரி­வித்­துள்­ளது.

இலங்­கைக்கு ஏற்­பட்­டுள்ள கதி, மற்ற நாடு­க­ளுக்கு ஒரு பாட­மாக அமை­யும் என்று அம்­மு­க­மை­யின் தலை­வர் பில் பெர்ன்ஸ் கருத்­த­ரங்கு ஒன்­றில் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

"தாங்­கள் முத­லீ­டு­க­ளைச் செய்­வ­தற்­காக கவர்ச்­சி­க­ர­மான கார­ணங்­களை சீனா முன்­வைக்­கும். ஆனால் இலங்கை இன்று எந்த நிலை­யில் உள்­ளது என்­பதை மற்ற நாடு­கள் பார்க்க வேண்­டும். சீனா­வி­டம் வெகு­வா­கக் கடன்­பட்­டுள்­ளது இலங்கை.

"எதிர்­கால பொரு­ளி­யல் தொடர்­பான முட்­டாள்­த­ன­மான பந்­த­யங்­களில் ஈடுபட்டதால் இன்று அரசி­யல், பொரு­ளி­யல் ரீதி­யில் பேர­ழிவைச் சந்­தித்­துள்­ளது இலங்கை," என்று பில் பெர்ன்ஸ் மேலும் கூறி­யுள்­ளார்.

மத்­திய கிழக்கு அல்­லது தெற்­கா­சிய நாடு­கள் மட்­டு­மல்­லா­மல், ஒட்­டு­மொத்த உலக நாடு­களும் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்­றும் அவர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு, ஹம்­பன்­தோட்டா துறை­முக கட்­டு­மா­னத்­துக்­காக சீனா­வி­டம் பெற்ற 1.4 பில்­லி­யன் டாலர் கடனை இலங்­கை­யால் அடைக்க முடி­ய­வில்லை. இதை­ய­டுத்து சீன நிறு­வ­னம் ஒன்­றுக்கு அந்­தத் துறை­மு­கத்தை 99 ஆண்­டு­கால குத்­த­கைக்கு அளித்­துள்­ளது இலங்கை.