சடாமுடி சம்சாரி உடலில் உரசி சட்டை உரிக்கும் நாகப்பாம்பு

சடாமுடி சம்சாரி உடலில் உரசி சட்டை உரிக்கும் நாகப்பாம்பு

4 mins read
724aae4f-56c3-4750-b4b9-1a7cd8619471
வேப்பங்குளம் என்ற கிராமத்தில் சாலை ஓரம் இயற்கையாகவே தோன்றிய புற்றுடன் ஒட்டி உள்ள இந்தத் தரையில்தான் திரு கிருஷ்ணமூர்த்தி அன்றாடம் இரவில் தூங்குகிறார். பவுர்ணமி அல்லது அமாவாசையன்று நாகப்பாம்பு வந்து தன் உடலில் ஏறி இறங்கி விளையாடி, உரசி சட்டையை உரிக்கும் என்கிறார் இந்தச் சடாமுடி முதியவர். செய்தி&படங்கள்: எம். கே. ருஷ்யேந்திரன் -
multi-img1 of 5

நாகப்பாம்பு நடு சாமத்தில் முதியவர் ஒருவர் மீது ஏறி இறங்கி உரசி விளை­யாண்டு சட்டையை உரிக்­கிறது என்று எனக்குப் பழக்கமான ஒரு­வர் தெரி­வித்­ததை அடுத்து அவ­ரி­ட­மி­ருந்து முக­வ­ரியை வாங்­கிக்கொண்டு மயிலா­டு­துறை அருகே இருக்­கும் வேப்பங்­கு­ளம் என்ற கிரா­மத்­துக்கு விரைந்­தேன்.

அந்­தக் கிரா­மத்­துக்­குள் நுழை­வதற்கு முன்­ன­தா­கவே சாலை ஓர­மாக வித்­தி­யா­ச­மாக ஒரு வழி­பாட்டு இடம் தென்­ப­டவே, வண்­டியை நிறுத்தி­விட்டு கீழி­றங்கி நின்­றேன்.

பக்­கத்­தில், ஓர் ஆள் மட்­டும் குனிந்து உள்ளே சென்று வெளியே வரும் அள­வுக்கு ஒரு சிறிய குடிசை இருந்­தது. அதன் உள்ளே இருந்து 'அய்யா இதோ வந்துவிடு­கி­றேன்' என்று ஒரு குரல் கேட்­டது. சத்தம் வந்த குடில் பக்கம் பார்வையைத் திருப்பினேன். இந்­தச் சடா­முடி முதி­ய­வர் வெளியே வந்­தார்.

"என் தாய், தந்தை, பாட்­டன், பாட்டி எல்­லா­ருமே இதே இடத்­தில்­தான், சாலை ஓர குடி­சை­யில்­தான் வசித்து வந்தோம்.

"26 ஆண்­டு­க­ளுக்கு முன் வைகாசி மாதம் கடைசி சனிக்­கிழமை பின்­னி­ரவு சுமார் 3 மணிக்கு ஒரு கனவு கண்­டேன். 10 வயது சிறுமி, ஏரா­ள­மான நகை­க­ளு­டன் தரை­யைத் தொடும் அள­வுக்கு தலை­மு­டி­யு­டன் இருந்­த­தைப் பார்த்து திடுக்­கிட்டு, என்ன வேண்டு­மென்று கேட்­டேன்.

"தரை­யைப் பார்க்­கும்­படி அந்­தச் சிறுமி சொல்ல, கீழே பார்த்த நான் திடுக்­கிட்­டேன். ஒரு பெரிய குழியில் ஐந்து தலை நாகத்­தைப் பார்த்து பயந்­து­விட்­டேன்.

"சில மாதங்­க­ளுக்­குப் பிறகு இந்த இடத்­தில் இந்­தப் புற்று அது­வா­கவே கொஞ்­சம் கொஞ்­ச­மாக மேலே கிளம்பி வந்­தது.

"அது­வ­ரை­, விவ­சாய வேலையை நாள் கூலிக்கு செய்துகொண்டிருந்த எனது கவ­னம் பாம்பு மீது திரும்­பி­யது. பாம்புப் புற்றைப் பரா­ம­ரிக்­கத் தொடங்­கி­னேன். பாம்பை வழி­படத் தொடங்­கி­னேன்.

"அதற்­குள்­ளாக எனது ஒரே மகன் வேல்முரு­கன், அபி­ராமி என்ற பெண்ணைத் திரு­ம­ணம் செய்து­கொண்டு வேறு இடத்­திற்கு குடி­பெ­யர்ந்­து­விட்­டான்.

"அவ­னுக்கு நாக­லெட்­சுமி, ஆர்த்தி என்ற இரண்டு பெண் பிள்­ளை­கள் உண்டு. என் மனைவி கோவிந்­தம்மா என் மக­னு­டன் வசிக்­கி­றாள். இப்­போது இங்கு நான் மட்­டும்­தான் பாம்­பு­த் துணையுடன் வாழ்கிறேன். இந்­தத் தரை­யில்­தான் எப்­போதுமே தூங்­கு­வேன்," என்று கூறிய திரு கிருஷ்ணமூர்த்தி என்ற இந்த 75 வயது பெரியவர், அருகே ஒரு சிமெண்ட் தரையைக் காட்டி னார். அது பெரிய பாம்புப் புற்றுடன் சேர்ந்து இருந்தது.

"நடு இரவில் ஒரு மணிக்­குப் பிறகு 2.30 மணிக்­குள் நான் படுக்­கும் இடத்­திற்கு நாகப்பாம்பு வரும்.­

"பாம்பை நான் நாகம்மா, பால­நா­கம்மா என்­று­தான் அழைப்­பேன். என் உறக்­கத்தைக் கெடுக்­கும் அள­வுக்கு என் மீது ஏறி இறங்கி என் உட­லு­டன் தன் உடலை உரசி பாம்பு விளை­யா­டும்.

"அமாவாசை, பவுர்ணமி இரவில் என் உடம்­பின் மீது உரசி பாம்பு சட்­டையை உரிக்­கும். தூக்­கத்தைக் கெடுக்­காதே என்று நான் சத்­தம் போடு­வேன். அது என் உடலை விட்டு கீழே இறங்கி புற்­றுக்­குள் போய்­வி­டும்.

"நான் சொல்­வ­தை நம்­புங்­கள். அதை­விட நல்­ல­பாம்பை நம்­புங்­கள்.

"பவுர்­ணமி அல்­லது அமா­வாசை­யன்று இதே இடத்­துக்கு பின்­னி­ரவு நேரத்­தில் வாருங்­கள். நிச்­ச­ய­மாக என்­னு­டன் நீங்­கள் இதே தரை­யில் பாம்பைப் பார்க்­க­லாம்," என்று திரு கிருஷ்­ண­மூர்த்தி கூறி­ய­தைக் கேட்டு கொஞ்சம் பயந்துவிட்டேன்.

அதற்­குள்­ளாக அந்த வழியே வந்­த­வர்­கள், போன­வர்­கள் பல­ரும் கிருஷ்­ண­மூர்த்­தியை நலம் விசாரித்து­விட்டுச் சென்­றார்­கள்.

கிருஷ்­ண­மூர்த்­தி­யி­டம் பாம்பு சட்டை எப்­படி இருக்­கும் என்று கேட்­டேன். அவர் இந்­தப் புற்று இருக்­கும் இடத்­திற்­குப் பின்­பு­றம் சென்று பெரிய புடவை அள­வுக்கு மஞ்­சள் துணியை எடுத்து வந்­தார். அதன் நடு நடுவே முடிச்சு முடிச்­சாக இருந்­தது. அவர் பைகளிலும் சிறுசிறு துணியிலும் எதையோ முடிந்து வைத்திருக்கிறார்.

ஒரு முடிச்சை அவிழ்த்துக் காட்டி­னார். அதன் உள்ளே பாம்புச் சட்டையைப் (தோல்) பார்த்­தேன்.

"நாக­தோ­ஷம் உள்­ள­வர்­கள் அந்த தோஷத்தைக் கழிக்க என்­னி­டம் வந்து இந்­தச் சட்­டையை (தோலை) நன்­கொ­டை­யாக பணம் கொடுத்து வாங்­கிச் செல்­வார்­கள்.

"இதை கையிலோ தலை­யிலோ சுமந்து ஏதா­வ­தொரு கோயி­லுக்­குச் சென்று நாகத்தை வழி­பட்­டால் தோஷம் போய்­வி­டும் என்று அவர்­கள் நம்­பு­கி­றார்­கள். இப்­ப­டி­யா­கத்­தான் என் காலம் ஓடு­கிறது," என்­றார் திரு கிருஷ்­ண­மூர்த்தி.

கிருஷ்­ண­மூர்த்தி கொஞ்­சம் கொஞ்­ச­மாக நீட்­டித்து கட்டி உள்ள பால­நா­கம்மா வழிபாட்டிடத்தில் பல விநோ­தங்­கள் தென்பட்டன.

புற்­றுக்கு இடது புறம் ஐந்து வித­மான மரங்­கள் சேர்ந்து பின்னிப் பிணைந்து வளர்கின்­றன. அதை எனக்குக் காட்­டிய திரு கிருஷ்­ண­மூர்த்தி, இது ஆல­ம­ரம், இது அர­ச­மரம், இது­தான் வேப்ப மரம், நடுவே உள்­ளது பனை­ம­ரம், கீழே வளர்­வது நுணா­ம­ரம் என்று விளக்­கி­னார்.

"நுணா மரத்­தைப் பார்த்­தீர்­களே, அது பாம்பு போலவே வளர்­வதைக் கவ­னித்­தீர்­களா," என அந்த முதி­ய­ வர் கேட்­டதைக் கேட்டு நானும் அதை உற்றுப் பார்த்­தேன்.

"நான் தீவிர பாம்பு பக்­த­னாக மாறி­யது முதலே சடா­மு­டி­யாக மாறி­விட்­டேன். நாகத்­தி­டம் நச்சு உண்டு என்­றா­லும் அதை நல்­ல­பாம்பு என்று சொல்­வ­தற்­குக் கார­ணம் அந்­தப் பாம்பு யாருக்­கும் அது­வாகக் கெடு­தல் செய்­யாது.

"இதை என் அனு­ப­வத்­தில் நான் கண்­கூ­டா­கக் கண்டு வரு­கி­றேன். எந்­த­வொரு நாகமும் தன்னைப் பாது­காத்­துக்கொள்ள வேண்­டிய சூழ்­நி­லை­யில் வேறு வழி­யில்­லா­மல் தான் ஒரு­வரைக் கடிக்­கும்.

"பாம்­பைக் கண்­டால் படை­யும் நடுங்­கும். பாம்பு கடித்­தால் உயிர்­போய் விடும். ஆனால் என்னைப் பொறுத்­த­வரை என் உயி­ரும் உடலு­மாக இருந்து, துணை­யாக என்னை காத்து வரு­வது என் நாகம்­மா­தான்," என்று திரு கிருஷ்­ண­மூர்த்தி கூறி­ய­போது அவர் உணர்ச்­சி­வ­சப்­பட்டு மெய்­ம­றந்த நிலை­யில் இருந்­தது தெளி­வா­கத் தெரிந்­தது.

வேப்­பங்­கு­ளம் பாம்புப் புற்றை கிருஷ்­ண­மூர்த்தி துணை­யு­டன் அருகே சென்று உற்றுப் பார்த்­தேன்.

பாம்பு நினை­வுடனே இருந்த எனக்கு அங்கு எதைப் பார்த்­தாலும் பாம்பு ஊர்­வ­தைப் போலவே தெரிந்­த­தால் பயந்­து­விட்­டேன்.

இரவு நேரத்­தில் வாருங்­கள் என்று திரு கிருஷ்­ண­மூர்த்தி கூறியது அப்போது என் நினை­வுக்கு வந்­தது. பயம்தான் அதிக மானது. அடுத்தடுத்து அமாவாசை, பவுர்ணமி வரும் போகும். ஆனால் துணிச்சல் வருமா என்பதுதான் சந்தேகம். உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், நீங்கள் தயார் என்றால் வேப்பங்குளம் போய் பாருங்கள்.

குறிப்புச் சொற்கள்