மாணவர்கள் மடிமேல் அமர்ந்து போராட்டம்

மாணவர்கள் மடிமேல் அமர்ந்து போராட்டம்

1 mins read
ba7244fa-973e-475f-81ed-1f17d8275b6f
பேருந்து நிறுத்தத்தில் சேர்ந்து உட்கார முடியாமல் நீண்ட இருக்கை தனித்தனி நாற்காலியாக மாற்றப்பட்டதைக் கண்டித்து கல்லூரி, மாணவ மாணவிகள் மடியில் அமரும் போராட்டத்தை நடத்தினர். படம்: ஊடகம் -

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில் திரு­வ­னந்­த­பு­ரத்­தில் செயல்­படும் ஒரு பொறி­யி­யல் கல்­லூரி அருகே உள்ள ஒரு பேருந்து நிறுத்­தத்­தில் நடுவே தடுப்பு இல்­லாத நீண்ட இருக்கை அமைக்­கப்­பட்டிருந்தது.

அதில் மாணவ, மாண­வி­கள் உர­சிக்கொண்டு உட்­கா­ரு­கி­றார்­கள் என்­ப­தால் நீண்ட இருக்கையைத் துண்டு துண்­டாக தனித்­தனி நாற்­கா­லி­யாக யாரோ மாற்றிவிட்­டனர்.

இதை ஆட்­சே­பித்து அந்­தப் பொறி­யி­யல் கல்­லூரி மாண­வி­களும் மாண­வர்­களும் பேருந்து நிறுத்­தத்­தில் இருந்த தனித்­தனி நாற்­கா­லி­களில் ஒரு­வர் மீது ஒரு­வர் அமர்ந்து புதிய வகை போராட்­டத்தை நடத்­தி­னார்­கள். அந்­தப் போராட்­டத்­தைக் காட்டும் காணொ­ளி­களும் படங்­களும் சமூக ஊட­கங்­களில் காட்டுத் தீ போல் பர­வின.

இத­னை­ய­டுத்து அந்த நக­ரின் மேயர் ஆரியா ராஜேந்­தி­ரன் சம்­பவ இடத்­திற்­குச் சென்­றார். மாந­க­ராட்சி நிர்­வா­கம் ஆண், பெண் இரு­வருக்­கும் பொது­வான இருக்­கை­களை அமைக்­கும் என்று மாண­வர்­களிடம் அவர் உறுதியளித்தார்.

இத­னி­டையே, மடி­யில் அம­ரும் வினோத ஆர்ப்­பாட்­டத்­தில் பங்­கெ­டுத்­துக்­கொண்ட மாண­வர்­க­ளின் பெற்­றோர்­கள், சமூக ஊட­கத்­தில் காணொ­ளி­கள், படங்­கள் பர­வி­யது பற்றி வருந்தினர். என்றா­லும் மாண­வர்­க­ளோ­டும் மேய­ரோ­டும் சேர்ந்து பேருந்து நிலை­யத்­தின் இருக்கை வேறு வடி­வில் அமைக்­கப்­பட்­டதை அவர்­கள் கண்­டித்­த­னர்.

பேருந்து நிறுத்­தத்தில் கல்­லூரி மாண­வி­களும் மாண­வர்­களும் மிகவும் நெருக்­க­மாக பழ­கு­கி­றார்­கள் என்­ப­தால் இந்­தக் காரி­யத்தை அந்­தப் பகுதி குடி­யி­ருப்­பா­ளர் அமைப்பு­கள் சேர்ந்து செய்­தி­ருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டு­கிறது.

மாணவ, மாண­வி­கள் நடத்­திய போராட்­டத்­துக்கு 'காதல் முத்­தம்' என்று பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது.