புதுடெல்லி: திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்பரால் கர்ப்பமடைந்தார்.
திருமணமாகாதவர் என்ற கார ணத்தைச் சுட்டிக்காட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
அவர் உயர் நீதிமன்றம் சென்றார். அங்கு நீதி கிடைக்காததால் கடைசியாக உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
அதில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியானது.

