புதுடெல்லி: அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் 296 கிலோமீட்டர்
நீளமுள்ள புத்தம் புதிய விரைவுச்சாலை தற்போது மோசமான நிலையில் இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி குறைகூறியுள்ளார்.
அந்த விரைவுச்சாலையை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில நாள்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
"அந்த விரைவுச்சாலையைக் கட்டி முடிக்க ரூ. 15,000 கோடி செலவானது. ஆனால் கடந்த ஐந்து நாள்களாகப் பெய்த மழையைக்கூட அதனால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே, புதிதாகக் கட்டப்பட்ட விரைவுச்சாலையின் தரத்தைப் பற்றி கேள்விகள் எழு
கின்றன," என்று டுவிட்டரில் வருண் காந்தி பதிவிட்டார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரே அதிருப்திக் குரல் எழுப்பியதை அடுத்து, இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி அரை மனதுடன் மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்துவதற்கு இது ஓர் உதாரணம் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.

