இன்று புதிய ஒரு வரலாறு

இன்று புதிய ஒரு வரலாறு

1 mins read
25fed4c6-1485-4a30-9da3-97160142a2ae
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் புதி­தாக இது­வரை இல்­லாத ஒரு வர­லாறு இன்று படைக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டு­ள்ளது.

அண்­மை­யில் நடந்த தேர்­தலில் அமோக வெற்றி பெற்ற திரௌபதி முர்மு இன்று நாட்­டின் 15வது அதி­ப­ராகப் பதவி ஏற்­கி­றார்.

இந்­திய வர­லாற்­றில் பழங்­குடி இனத்­தைச் சேர்ந்த ஒரு­வர் அதி­ப­ரா­வது இதுவே முதல் முறை என்­ப­தால் முர்மு பதவி ஏற்பு ஒரு மிக முக்­கிய நிகழ்ச்சி என்று தக­வல்­கள் தெரி­வித்து உள்­ளன.

நாடா­ளு­மன்ற மத்­திய அரங்­கில் நடக்­கும் பதவி ஏற்பு நிகழ்ச் சிக்கு முன்னதாக 21 குண்டு­கள் முழங்­கும் என்று உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது. இந்­திய தலைமை நீதி­பதி என் வி ரமணா அதி­ப­ருக்­குப் பதவிப் பிர­மா­ணம் செய்­து­வைப்­பார்.