அம்மாவை கைவிட்டுவிட்டு ஓடிய அமைச்சரின் அணுக்க நடிகை

அம்மாவை கைவிட்டுவிட்டு ஓடிய அமைச்சரின் அணுக்க நடிகை

3 mins read
bc771a72-07d0-4ce3-ae15-8115fc9dd77c
மேற்கு வங்காள கல்வி அமைச்சராக பார்த்தா சட்டர்ஜி இருந்த போது ஒரு நிகழ்ச்சியில் அவருடன் நடிகை அர்பிதா முகர்ஜி கலந்துகொண்டார். படம்: இந்திய ஊடகம் -

கோல்­கத்தா: மேற்கு வங்­கா­ளத்­தின் கல்வி அமைச்­ச­ராக பார்த்தா சட்­டர்ஜி இருந்­த­போது மேற்கு வங்காள பள்ளிக் கல்­விச் சேவை ஆணை­யத்­தி­லும் மேற்கு வங்­காள தொடக்­கப்­பள்ளி கல்­விக் கழகத்திலும் பெரு­ம­ள­வில் ஊழி­யர் சேர்ப்பு மோசடி நடந்­த­தாக புகார்கள் கிளம்­பி­யதை அடுத்து அம­லாக்­கத் துறை அதி­கா­ரி­கள் பார்த்தா சட்டர்ஜியைக் கைது செய்து இருக்­கிறார்­கள்.

அவர் இப்­போது மேற்கு வங்­கா­ளத்­தின் வர்த்­தக, தொழில் அமைச்­ச­ராக இருக்­கி­றார். மேற்கு வங்­காள முதல்­வர் மம்தாவுக்கு மிக­வும் நெருக்­க­மா­ன­வர் என்று கூறப்­படும் பார்த்தா சட்­டர்­ஜிக்கு, அர்­பிதா முகர்ஜி என்ற நடிகை மிக­வும் அணுக்­க­மா­ன­வர் என்­பது இப்­போது தெரி­ய­வந்து இருக்­கிறது.

மேற்கு வங்க நடி­கையான அர்பிதா முகர்­ஜி­யின் வீட்­டில் இருந்து ரூ.20 கோடி பணம், பெரு­வா­ரி­யான நகை­கள், இதர விலை உயர்ந்த பொருள்­களை அதி­கா­ரி­கள் கைப்­பற்றி இருக்­கி­றார்­கள்.

இந்த ஊழல் தொடர்­பில் குறைந்­த­பட்­சம் 13 இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்டு இருக்­கிறது. விரை­வில் முதல்­வர் மம்­தா­வுக்­கும் பிரச்­சினை வர­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­த­ நி­லை­யில், பார்த்தா சட்­டர்ஜி கல்வி அமைச்­ச­ராக இருந்­த­போது நடிகை அர்­பிதா முகர்­ஜிக்­கும் அவருக்கும் இடை­யில் நெருக்­க­மான தொடர்­புண்டு என்று தக­வல்­கள் வெளி­யாகி உள்ளன.

அர்­பிதா 2008 ஆம் ஆண்­டில் ஒடியா திரைப்­ப­டத்­தில் நடித்­தார். பிறகு பல திரைப்­ப­டங்­களில் நடித்து இருக்­கும் அவர், தொலைக்­காட்சி­யி­லும் தலை­காட்டி இருக்­கி­றார்.

நடிகை அர்­பி­தா­வுக்கு எப்­போ­துமே உயர்ந்த இலக்கு உண்டு என்­றும் அதன் கார­ண­மாக அவர் மினோட்டி முகர்ஜி என்ற தன்­சொந்த தாயையே கைவிட்­டு­விட்டுச் சென்­று­விட்­டார் என்­றும் அம­லாக்கத் துறை தெரி­விக்­கிறது.

அந்த நடிகை, கோல்­கத்­தா­வின் வடக்குப் புறத்­தில் இருக்­கும் பெல்­கா­ரியா என்ற பகு­தி­யில் சிறிய அடுக்கு வீடு ஒன்­றில் தன் தாயா­ரு­டன் வசித்து வந்­தார். கண­வன் இல்­லாத தனது தாயாரைத் தனி­மை­யில் விட்டுவிட்டு அந்த நடிகை பிறகு தெற்கு கோல்­கத்­தா­வில் இருக்­கும் டைமண்ட் சிட்டி என்ற மிக ஆடம்­ப­ர­மான வீட்­டில் வசிக்கச் சென்­று­விட்­டார்.

அந்த வீட்­டில் இருந்­து­தான் பெரும் பணம், நகை­கள் கைப்­பற்­றப்­பட்டு இருக்­கின்­றன.

ஆடம்பர வீட்­டுக்குச் சென்­றது முதலே தன் மகள் தன்­னைக் காண வரு­வது அரி­தா­கி­விட்­டது என்று மினோட்டி முகர்ஜி அண்­மை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்தார்.

"என்ன வேலை செய்­கி­றாய் என்று என் மக­ளி­டம் நான் பல முறை கேட்டு இருக்­கி­றேன். ஆனால், ஒழுங்­கான பதில் வந்­த­தில்லை. இப்­ப­டிப்­பட்ட காரி­யங்­களில் என் மகள் ஈடு­ப­டு­வாள் என்­பது தெரிந்­திருந்தால் அவளுக்கு ஏற்­கெ­னவே திரு­ம­ணம் செய்து வைத்­தி­ருப்­பேன்," என்று அந்­தத் தாயார் கூறி­னார்.

அர்­பிதா முகர்­ஜி­யின் தந்தை மத்­திய அர­சாங்­கத்­தில் வேலை பார்த்து வந்­த­வர். அவர் வேலை பார்த்தபோதே மர­ணம் அடைந்­து­விட்­டார். கருணை அடிப்­ப­டை­யில் அர்­பி­தா­வுக்கு வேலை வழங்க அர­சாங்­கம் முன்­வந்­தது. ஆனால், அதை மறுத்­து­விட்ட அர்­பிதா, நடிப்­பு­தான் தனக்குப் பிடிக்­கும் என்­றும் நடிப்புத் தொழி­லுக்­குத் தான் போகப்­போ­வ­தா­க­வும் கூறி­விட்­டார்.

ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன் அப்­போது கல்வி அமைச்­ச­ராக இருந்த பார்த்தா சட்­டர்­ஜி­யி­டம் அந்த நடி­கையை நிலச் சொத்து உரி­மை­யா­ளர் ஒரு­வர் அறி­மு­கப்­படுத்தி வைத்­தார்.

அதை­ய­டுத்துப் பல பொது நிகழ்ச்சி­களில் அமைச்­ச­ரு­டன் அர்­பி­தாவும் காணப்­பட்­டார். கைதான நடிகை, தான் ஒரு அப்­பாவி என்றும் சட்­டத்தை தான் நம்­பு­வ­தா­க­வும் தெரி­வித்து இருக்­கி­றார்.