ராஜ்நாத் சிங்: ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்திய பகுதிதான்

ராஜ்நாத் சிங்: ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்திய பகுதிதான்

2 mins read
eaf68332-a13e-4c70-83df-e33a7b8adf1e
-

புது­டெல்லி: அண்டை நாடு­க­ளுடன் நல்­லு­றவைப் பேண வேண்­டும் என்­பதே இந்­தி­யா­வின் விருப்­பம் என்­றும் பாகிஸ்­தான் அவ்­வாறு நினைப்­ப­தில்லை என்­றும் பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் தெரி­வித்­துள்­ளார்.

பாகிஸ்­தா­னு­ட­னான கார்­கில் போரில் இந்­தியா வெற்­றி­பெற்று 23 ஆண்­டு­கள் முடிந்­துள்­ளன.

இதை­ய­டுத்து கார்­கில் வெற்றி தினக் கொண்­டாட்­டத்தைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்­சர், பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மித்­துள்ள காஷ்­மீ­ரும் இந்­தி­யா­வின் ஒருங்­கிணைந்த பகு­தி­தான் எனத் திட்­ட­வட்­ட­மா­கக் குறிப்­பிட்­டார்.

"கடந்த 1990களில் கார்­கி­லில் உள்ள திராஸ் பகு­தி­யில் பாகிஸ்­தான் ராணு­வத்­தி­னர் அத்­து­மீறி நுழைந்­த­னர். அதற்கு நாம் சரி­யான பதி­லடி கொடுத்­தோம். அதை யாராலும் மறக்க முடி­யாது.

"பாகிஸ்­தா­னு­டன் நடந்த கடைசி போர் 1999இல் கார்­கில் போர் ஆகும். இந்­தப் போர் முழு அள­விலா­னது அல்ல. ஆனால் ஒவ்­வொரு போரி­லும் நமது இந்­திய வீரர்­கள் தங்­கள் இன்­னு­யிரை நாட்­டுக்­காக கொடுத்­துள்­ள­னர்.

"ஜம்மு, காஷ்­மீர், லடாக் பகுதி முழு­வ­தும் ஒரு 'முக்­கிய போர் அரங்­க­மா­கவே' உள்­ளது," என்­றார் அமைச்­சர் ராஜ்­நாத் சிங்.

இந்­திய வீரர்­க­ளின் துணிச்­சல் மற்­றும் தைரி­யத்­தால் பாகிஸ்­தா­னின் முயற்­சி­கள் முறி­ய­டிக்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், இந்­தி­யா­வின் பலத்தை அண்டை நாடு நன்­றாக அறிந்­தி­ருக்­கும் என்று நம்­பு­வ­தா­கத் தெரிவித்தார்.

இதற்­கி­டையே, லடாக் எல்­லைப் பகு­தி­யில் சீன போர் விமா­னங்­கள் பறந்­தது பதற்­றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. ஒரு­பக்­கம் ராணுவ உய­ர் அ­தி­கா­ரி­கள் மட்­டத்­தி­லான பேச்­சு­வார்த்தை நடந்து கொண்­டி­ருக்­கும்­போதே சீன ராணு­வம் இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக இந்­திய ராணு­வம் சாடி உள்­ளது. இது இந்­தி­யாவை தாக்­கு­தல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு தூண்­டும் முயற்சி என்­றும் ராணு­வம் கூறி­யுள்­ளது.