எதிர்காலத்தைக் காப்பாற்றுக: மோடிக்கு உக்ரேன் மருத்துவ மாணவர்கள் கோரிக்கை

எதிர்காலத்தைக் காப்பாற்றுக: மோடிக்கு உக்ரேன் மருத்துவ மாணவர்கள் கோரிக்கை

1 mins read
15bbb6e6-e420-4f64-9e4e-f8534ef613df
-

புது­டெல்லி: உக்­ரே­னில் இருந்து நாடு திரும்­பி­யுள்ள மருத்­துவ மாண­வர்­க­ளின் எதிர்­கா­லத்­தைக் காப்­பாற்­றற பிர­த­மர் மோடி உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று உருக்­க­மான கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

உக்­ரேன் மருத்­துவ மாண­வர், பெற்­றோர் சங்­கம் வெளி­யிட்ட அறிக்­கை­யில், தங்­க­ளு­டைய நிலை குறித்து பிர­த­மர் அலு­வ­ல­கம், சுகா­தா­ரத் துறை, கல்­வித்­துறை அலு­வ­ல­கங்­கள், அதி­பர் அலு­வ­ல­கம் எனப் பல்­வேறு இடங்களுக்கு கடிதம் அனுப்­பி­ய­தா­க­வும் இது­வரை தீர்வு கிடைக்­க­வில்லை என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், தங்­கள் கோரிக்­கையை வலி­யு­றுத்தி புது­டில்லியில் உள்ள ராம்­லீலா திடலில் உக்ரேனில் இருந்து திரும்­பிய மருத்­துவ மாண­வர்­களும் அவர்­களு­டைய பெற்­றோரும் ஐந்து நாள் உண்ணா­விரதப் போராட்­டத்தை மேற்­கொண்­டுள்­ள­னர்.

வேறு வழி­யின்றி இந்­தப் போராட்­டத்தை தொடங்கி உள்­ள­தாக அச்­சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

உக்­ரே­னில் இருந்து நாடு திரும்­பி­ய­வர்­களில் 12 ஆயி­ரம் பேர் இறு­தி­யாண்டு மருத்­து­வம் படித்து வந்­த­தா­க­வும், இந்­தி­யா­வில் மொத்­தம் உள்ள 600 மருத்­துவக் கல்­லுா­ரி­களில் தலா 20 மாணவர்­களைச் சேர்த்­துக்கொண்­டால் கூட தங்­க­ளது எதிர்­கா­லம் பாதிக்­கப்­ப­டாது என்­றும் மாண­வர்­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

உக்ரேனில் மருத்துவம் படித்து வந்த சுமார் இருபதாயிரம் இந்திய மாணவர்்கள் நாடு திரும்பி உள்ளனர்.