குரங்கம்மை: கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள மாநிலங்கள்

குரங்கம்மை: கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள மாநிலங்கள்

1 mins read
60c6c2c2-a652-41d8-84a4-a7530c37a856
-

லக்னோ: நாடு முழு­வ­தும் குரங்­கம்மை பாதிப்பு மெல்ல அதி­க­ரித்து வரும் நிலை­யில், உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படு­கின்­றன.

அதன்­படி, அம்­மா­நி­லத்­தில் கொரோனா தொற்­றுக்கு சிகிச்சை அளிக்­கக்­கூ­டிய மருத்­து­வ­ம­னை­களில் குரங்­கம்­மை­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என படுக்­கை­களை ஒதுக்க வேண்­டும் என சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் குரங்­கம்மை பாதிப்­பைக் கண்­ட­றிய 16 ஆய்­வுக்­கூ­டங்­கள் நிறு­வப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், குரங்­கம்மை பாதித்த நாடு­களில் இருந்து வரக்­கூ­டிய அனை­வ­ரும் தீவி­ர­மா­கக் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

எனி­னும், அங்கு இது­வரை குரங்­கம்­மை­யால் யாரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை.

குரங்­கம்­மைக்­கான அறி­குறிகளுடன் டெல்லி வந்­தி­றங்­கும் விமானப் பய­ணி­கள், விமான நிலையத்­தில் இருந்து லோக் நாயக் ஜெய்­பி­ர­காஷ் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

டெல்­லி­யில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஒரு­வ­ருக்கு குரங்­கம்மை தொற்று இருப்­பது உறு­தி­யா­னது.

இதற்­கி­டையே வளை­குடா, ஆப்­பி­ரிக்க நாடு­களில் இருந்து ஹைத­ரா­பாத் வந்­தி­றங்­கும் பய­ணி­களை ராஜீவ்­காந்தி அனைத்­து­லக விமான நிலை­யத்­தி­லேயே வைத்து பரி­சோதனைக்கு உட்­ப­டுத்­து­வது நல்லது என தெலுங்­கானா அரசு கரு­து­கிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்கு அனு­மதி அளிக்­கு­மாறு மத்­திய அர­சுக்கு அம்­மா­நில அரசு கோரிக்கை விடுத்து காத்­தி­ருக்­கிறது.

இதற்­கி­டையே, பெங்­க­ளூ­ருக்­கும் மங்­க­ளூ­ருக்­கும் பல்­வேறு நாடு­களில் இருந்து நேரடி விமா­னம் மூலம் வரக்­கூ­டிய பய­ணி­க­ளுக்கு குரங்­­கம்மை சோதனை நடத்த உரிய ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. அம்­மா­நி­லத்­தி­லும் இது­வரை யாருக்கும் குரங்­கம்மை பாதிப்பு இல்லை.