புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம் நேற்று தொடங்கியது. இதில் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலையன்ஸ், ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நான்கும் பங்கேற்றன.
எனினும் அலைக்கற்றை உரிமையைப் பெறுவதில் இந்நிறுவனங்களுக்கு இடையே பெரிதாக ஆர்வம் தென்படவில்லை என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதால், எதிர்வரும் அக்டோபர் மாதத்துக்குள் 5ஜிக்கான ஏலம் முடிவடைந்து, சோதனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை அம்பானி, அதானி நிறுவனங்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
ஏலத்தில் தொடர்ந்து பங்கேற்க இதுவரை நான்கு நிறுவனங்கள் வைப்புத்தொகை செலுத்தியுள்ளன. அதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடியும், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.5,500 கோடியும் வோடஃபோன் ஐடியா ரூ.2,200 கோடியும், அதானி குழுமம் ரூ.100 கோடியும் செலுத்தியுள்ளன.
4ஜி இணைப்பைவிட 5ஜி இணைய இணைப்பானது பத்து மடங்கு வேகமாக இருக்கும்.

