கார்கில் போர்: வீரர்களுக்கு அதிபர், பிரதமர் வீர அஞ்சலி

கார்கில் போர்: வீரர்களுக்கு அதிபர், பிரதமர் வீர அஞ்சலி

1 mins read
50e1d371-a6da-4356-b056-d375d9c0e3a2
-

புது­டெல்லி: நாட்டைக் காக்க உயிரைத் தியா­கம் செய்த வீரர்­களுக்கு தலை­வ­ணங்­கு­வ­தாக நாட்­டின் புதிய அதி­பர் திரௌ­பதி முர்மு தெரி­வித்­தார்.

கார்­கில் போரின் வெற்றி தினத்­தைக் கொண்­டா­டும் வகை­யில் அவர் தமது டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

கடந்த 1999 ஜூலை 26ஆம் தேதி கார்­கில் போரில் இந்­திய ராணு­வம் வெற்றி பெற்­றது.

நேற்று அந்த வெற்­றி­யை­யும் போரில் உயி­ரி­ழந்த வீரர்­க­ளை­யும் நினை­வு­கூ­ரும் வகை­யி­ல், விஜய் திவாஸ் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

"நமது ராணு­வத்­தின் வீரத்­திற்­கான சின்­னம்­தான் கார்­கில் விஜய் திவாஸ். நாட்டைக் காக்க உயிரைத் தியா­கம் செய்த வீரர்­களுக்குத் தலை­வ­ணங்­கு­கி­றேன். அவர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் நாட்டு மக்­கள் அனை­வ­ரும் எப்­போ­தும் கடமைப்­பட்­டி­ருப்­பார்­கள்," என அதி­பர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ராணுவ வீரர்­க­ளின் வீரம் நாள்­தோ­றும் மக்­க­ளுக்கு உத்­வே­கம் அளிப்­ப­தா­கப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

"நமது நாட்­டைக் காப்­பாற்­று­வதற்­காக கார்­கில் போரில் பங்­கேற்று தங்­கள் இன்­னு­யிரை தியா­கம் செய்த ராணுவ வீரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­கி­றோம்," என்று அவர் கூறி­னார்.

பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங், டெல்­லி­யில் உள்ள போர் வீரர்­கள் நினை­வி­டத்­துக்குச் சென்று அஞ்­சலி செலுத்­தி­னார்.