நேஷனல் ஹெரால்டு வழக்கு; சோனியாவிடம் 3வது முறை விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கு; சோனியாவிடம் 3வது முறை விசாரணை

3 mins read
b17260a2-080e-47a6-b954-df9505e481c7
பிரியங்கா காந்தியுடன் விசாரணைக்கு வந்த சோனியா காந்தி. படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வின் காங்கிரஸ் கட்­சி­யின் தலை­வ­ரான சோனியா காந்தி நேற்று 3வது முறை­யாக அம­லாக்­கத் துறை­யில் முன்­னி­லை­யாகி நேஷ­னல் ஹெரால்டு தொடர்­பான வழக்­கில் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

நாட்­டின் முதல் பிர­த­ம­ரான ஜவ­ஹர்­லால் நேரு­வால் தொடங்­கப்­பட்ட 'நேஷ­னல் ஹெரால்டு' பத்­தி­ரி­கையை வெளி­யிட்டு வந்த 'அசோ­சி­யேட்­டட் ஜர்­னல்ஸ்' நிறு­வ­னத்தை காங்­கி­ரஸ் இடைக்­கால தலை­வர் சோனியா காந்தி, அவ­ரது மகன் ராகுல் காந்தி மற்­றும் காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­களை இயக்­கு­நர் ­க­ளாகக் கொண்ட 'யங் இந்­தியா' நிறு­வ­னம் கைய­கப்­ப­டுத்­தி­யது.

இதன் மூலம் ரூ.2,000 கோடி சொத்­து­களை 'யங் இந்­தியா' அப ­க­ரித்­துள்­ள­தாக பா.ஜ.க. மூத்த தலை­வர் சுப்­பி­ர­ம­ணிய சாமி வழக்கு போட்டு அது டெல்லி நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்­ளது.

இதில் சட்­ட­வி­ரோத பண பரி­மாற்­றம் நடந்­துள்­ள­தா­கக் கூறி அது­ பற்றி மத்­திய அம­லாக்­கத்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

முன்­ன­தாக இது குறித்து ராகுல் காந்­தி­யி­டம் ஐந்து நாட்­க­ளாக சுமார் 50 மணி நேரம் விசா­ரணை நடை­பெற்­றது. இதை­ய­டுத்து விசா­ரணைக்கு முன்­னி­லை­யா­கும்­படி சோனியா காந்­திக்கு இரண்டு முறை அழைப்­பாணை அனுப்­பப்­பட்­டது.

ஆனால் கொரோனா பாதிப்­பால் அம­லாக்­கத்­துறை முன் அவரால் முன்­னி­லை­யா­க முடிய­வில்லை. அதி­லி­ருந்து மீண்ட நிலை­யில் இம்­மா­தம் 21ஆம் தேதி அம­லாக்­கத்­துறை இயக்­கு­நர் அலு­வ­ல­கத்­தில் சோனியா காந்தி முதல் முறை­யாக முன்­னி­லை­யா­னார்.

அப்­போது அவ­ரி­டம் இரண்டு மணி நேரம் விசா­ரணை நடை­பெற்­றது. இதனை தொடர்ந்து சோனியா காந்­தி­யி­டம் நேற்று முன்­தி­னம் 2வது முறை­யாக அம­லாக்­கத்­துறை­யி­னர் விசா­ரணை நடத்­தி­னர்.

சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசா­ரணை மாலை 7 மணி அள­வில் நிறை­வ­டைந்­தது.

இந்த விசா­ர­ணை­யில் 'நேஷ­னல் ஹெரால்டு' பத்­தி­ரிகை நிறு­ வனத்தை 'யங் இந்­தியா' நிறு­வ­னம் கைய­கப்­ப­டுத்­தி­ய­போது சோனி­யா­வின் பங்­க­ளிப்பு, நிறு­வன நட­வ­டிக்­கை­களில் அவ­ரது செயல்­பா­டு­கள், சட்­ட­வி­ரோத பண பரி­மாற்­றம் நடந்­ததா என்­பது குறித்து அதி­கா­ரி­கள் கேள்­வி­கள் எழுப்பி அவ­ரது பதில்­களை பதிவு செய்­த­னர்.

இதை­ய­டுத்து, சோனியா காந்தி நேற்று மீண்­டும் விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யா­கு­மாறு அம­லாக்­கத்­துறை தெரி­வித்­தது.

இத­னால் நேஷ­னல் ஹெரால்டு வழக்­கில் 3வது முறை­யாக நேற்று அம­லாக்­கத்­துறை முன்பு சோனியா காந்தி முன்­னி­லை­யா­னார்.

இதற்­கி­டையே நேஷ­னல் ஹெரால்டு வழக்­கில் காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி விசா­ர­ணைக்கு முழு ஒத்­து­ழைப்பு அளிப் ­ப­தா­க­வும் அத­னால் அவ­ரி­டம் விசா­ரணை நிறைவு பெற­லாம் என்­றும் அம­லாக்­கத்­துறை வட்­டா­ரம் தெரி­வித்­துள்­ளது.

முதல் இரண்டு நாள்­களும் சோனி­யா­வு­டன் அவ­ரது மகள் பிரி­யங்கா காந்­தி­யும் சென்­றிருந்தார்.ஒரு மருத்­து­வக் குழு­வும் தயார் நிலை­யில் விசா­ரணை அலுவல­கத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் சோனியா காந்தி விசா­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் ஆங்­காங்கு பல இடங்­களில் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­யுள்­ள­னர்.

ராகுல் காந்தி தலை­மை­யில் நாடா­ளு­மன்­றத்தை நோக்கி பேரணி ­யாகச் செல்ல முயன்­ற­வர்­களை காவல்­து­றை­யி­னர் தடுத்து நிறுத்­தி­னர். இதில் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த எம்.பி.க்கள், நிர்­வாகி­ கள் ஈடு­பட்­ட­னர். ராகுல் காந்தி உட்­பட பலர் கைது செய்­யப்­பட்டு பின்­னர் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

இந்­தப் போராட்­டம் குறித்து டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்ள ராகுல்­காந்தி, வேலை­யில்லா திண்­டாட்­டம், பண­வீக்­கம், ஜிஎஸ்டி, அக்­னி­பாத் உள்­ளிட்­டவை குறித்து யார் கேள்வி கேட்­டா­லும் அவர்­களை சிறை­யில் அடைக்­கு­மாறு இந்த நாட்­டின் ராஜா உத்­த­ர­விட்­டுள்­ளார் என்று பிர­த­மர் மோடியை விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே விவாதம் நடத்த அவர்கள் மறுப்ப தாகவும் வெளியே எங்களை அவர்கள் கைது செய்கிறார்கள் என்றும் ராகுல் கூறினார்.

நேற்று புதுடெல்லியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் தலைமுடியைப் பிடித்து காவல்துறை யினர் இழுப்பதைக் காணொளி ஒன்று காட்டியது.

"அவர்கள் என்னைத் தாக்கினர். முடியைப் பிடித்து இழுத்தனர்," என்று ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.