எம்.பி.க்கள் இடைநீக்கம்; போராட்டம் அறிவிப்பு

எம்.பி.க்கள் இடைநீக்கம்; போராட்டம் அறிவிப்பு

2 mins read
4853d596-b637-4fc1-aa4e-b992fbba643f
-

புது­டெல்லி: எம்.பி.க்கள் இடை­நீக்­கத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து எதிர்க்­கட்சி எம்.பி.க்கள் மாநி­லங்­க­ள­வை­யில் தொடர்ந்து அம­ளி­யில் ஈடு­பட்டு வரு­வ­தால் நேற்று நாள் முழு­வ­தும் அவை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

நாடா­ளு­மன்ற மழைக்­கால கூட்­டத்­தொ­டர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த நிலை­யில் 20 மாநி­லங் களவை எம்.பி.க்கள் மற்­றும் நான்கு மக்­க­ளவை எம்.பி.க்கள் உட்­பட இடை­நீக்­கம் செய்­யப்­பட்ட 24 எம்.பி.க்க­ளுக்கு அனைத்து எதிர்க்­கட்­சி­களும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

இடை­நீக்­கத்தை ரத்து செய்­யும் வரை 50 மணி நேரம் பகல்-இரவு போராட்­டம் தொட­ரும் என எதிர்க்­கட்­சி­கள் அறி­வித்­துள்­ளன.

இரு அவை­க­ளி­லும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் விலை­வாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்­ளிட்­டவை தொடர்­பாக அம­ளி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

மக்­க­ள­வை­யில் அம­ளி­யில் ஈடு­பட்­ட­தாக மாணிக்­கம் தாகூர், ஜோதி­மணி உள்­பட 4 காங்­கி­ரஸ் எம்.பி.க்கள் நடப்பு கூட்­டத் தொட­ரின் எஞ்­சிய நாள்­கள் முழு­வ­தும் இடை­நீக்­கம் செய்­யப்­பட்டு உள்ளனர்.

மேல்­ச­பை­யில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் நேற்று அம­ளி­யில் ஈடு­பட்­ட­னர். இதை­ய­டுத்து 13 எம்.பி.க்கள் இடை­நீக்­கம் செய்­யப் படு­வ­தாக சபை துணைத்­த­லை­வர் ஹரி­வன்ஷ் அறி­வித்­தார்.

அவர்­கள் இந்த வாரம் முழு ­வ­தும் சபைக்கு வர தடை விதிக்­கப்­பட்­டது.

இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­வர்­களில் தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேரும் அடங்­கு­வர். திரி­ணா­முல் காங்­கி­ரசை சேர்ந்த ஏழு எம்.பி.க்கள், தெலுங்­கானா ராஷ்­டீ­ரிய சமி­தி­யைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட்­டைச் சேர்ந்த 2 பேரும் இந்­திய கம்­யூ­னிஸ்ட்­டைச் சேர்ந்த ஒரு­வ­ரும் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

இந்த நிலை­யில் மேல்­ச­பை­யில் நேற்று மேலும் ஒரு எம்.பி. சபை பங்­கேற்­புக்­குத் தடை­வி­திக்­கப் பட்­டது.

மேல் சபை­யின் நேற்­றைய கூட்­டத்­தின்­போது காகி­தங்­களைக் கிழித்து அதை அவைத் தலை­வ­ரின் இருக்கை முன்பு எறிந்த கார­ணத்­திற்­காக ஆம்­ஆத்மி கட்­சி­யைச் சேர்ந்த சஞ்­சய்­சிங் இவ்­வா­ரம் முழு­வ­தும் கூட்­டத்­தில் பங்­கேற்க தடை விதித்து சபை துணைத்­த­லை­வர் ஹரி­வன்ஷ் நாரா­யண் சிங் உத்­த­ர­விட்­டார்.