ேமற்கு வங்க அமைச்சர், உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்; ரூ.50 கோடி பறிமுதல்

ேமற்கு வங்க அமைச்சர், உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்; ரூ.50 கோடி பறிமுதல்

2 mins read
8a7e72fc-1322-423c-9669-190340a17cb1
(இடம்) அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவி யாளர் வீடுகளில் நடந்த சோதனை யில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநி­லத்­தில் ஆசி­ரி­யர் நிய­ம­னங்­களில் பெரும் மோசடி நடந்­துள்­ளது. இதன் தொடர்­பில் அம்­மா­நில அமைச்­சர் பார்த்தா சாட்­டர்ஜி, அவ­ரது உத­வி­யா­ளர் அர்­பிதா முகர்ஜி ஆகி­யோர் வீடு­களில் அதி­ரடி சோதனை நடத்­தப்­பட்டு பல கோடி ரூபாய் கைப்­பற்­றப்பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே 20 கோடி பணம் கைப்­பற்­றப்­பட்ட நிலை­யில் தற்­போது மேலும் 21 கோடி கைப்­பற்­றப்­பட்டு உள்­ள­தா­க­வும் மூன்று பெரிய பணம் எண்­ணும் இயந்­தி­ரங்­கள் மூலம் எண்­ணும் பணி நடை­பெற்று வரு­வ­தாகவும் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­வர்த்­தனை தொடர்­பாக அம­லாக்­கத்­து­றை­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்து பார்த்தா சட்­டர்ஜி, அவ­ரது உத­வி­யா­ளர் அர்­பிதா முகர்ஜி ஆகி­யோர் வீடு­களில் கடந்த வாரம் அதி­ரடி சோதனை மேற்­கொண்­ட­னர்.

அந்­தச் சோத­னை­யில் தற்­போது வங்­கி­கள் மற்­றும் ஏடி­எம்­ இயந்­திரங்க­ளில்­கூட கிடைக்­காத 2,000 ஆயி­ரம் ரூபாய் நோட்­டு­களாக ரூ. 21 கோடி ரொக்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அமைச்­ச­ரின் உத­வி­யா­ளர் அர்­பிதா முகர்ஜி வீட்­டி­லி­ருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்­பி­லான நகை­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

இதை­ய­டுத்து இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். ஆனால் உடல்­ ந­லக்­கு­றை­வால் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட பார்த்தா சாட்­டர்ஜி பின்­னர் விடு­விக்­கப்­பட்­டார்.

அமைச்­சர் பார்த்தா சட்­டர்ஜி மற்­றும் அர்­பிதா முகர்ஜி ஆகி­யோரை வரு­கிற ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை காவ­லில் வைத்து விசா­ரிக்க அம­லாக்­கத்­து­றைக்கு நீதி­மன்­றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

அண்­மைய சோத­னை­யில் மேலும் 29 கோடி ரூபாய் பறி­மு­தல் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. பணத்தை எண்­ணும் பணியை புதன்­கி­ழமை மதி­யம் முதல் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் தொடங்­கி­னர்.

மூன்று பெரிய எண்­ணும் இயந்­தி­ரங்­கள் மூலம் எண்­ணப்­பட்ட நிலை­யில் ரூ.20 கோடி இது­வரை கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. பணத்தை எண்­ணும் பணி தொடர்­வ­தால் அர்­பி­தா­வின் தெற்கு கோல்­கத்தா வீட்­டில் கைப்­பற்­றப்­பட்ட 22 கோடி பணத்­தை­விட இது அதி­க­மாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அர்பிதா முகர்ஜியின் இரண்டு வீடுகளில் இருந்தும் ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.