கள்ளச் சாராயம்; பலி எண்ணிக்கை 42ஆனது

1 mins read
1c6ae693-a864-4494-a49d-45a4567a148c
-

அக­ம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லத்­தில் கள்­ளச்­சா­ரா­யம் குடித்து இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 42ஆக அதி­க­ரித்­துள்­ளது. நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

குஜ­ராத் மாநி­லத்­தில் மது ­விலக்கு அம­லில் உள்­ளது. இந்­நி­லை­யில் கடந்த சில தினங்­க­ளாக அக­ம­தா­பாத் போடாட் மாவட்­டங்­களில் சட்­ட­வி­ரோ­த­மாக தயா­ரிக்­கப்­பட்ட கள்­ளச்­சா­ரா­யம் விற்­கப்­பட்­டுள்­ளது. இதை அப்­ப­கு­தி­க­ளைச் சேர்ந்த பல­ரும் வாங்­கிக் குடித்­துள்­ள­னர். சாரா­யம் குடித்த சில மணி நேரங்­களில் உடல்­ந­லக் குறைவு, மயக்­கம் கார­ண­மாக பல­ருக்கு அவதி ஏற்­பட்­டது. போடாட் மாவட்­டத்­தில் மட்­டும் 31 பேர் இறந்து ­விட்­ட­தாக மூத்த காவல்­துறை அதி­காரி அஷோக் யாதவ் தெரி­வித்­தார். அக­ம­தா­பாத்­தில் மேலும் 11 பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று அம்­மா­வட்ட அதி­காரி வி.சந்­திர சேகர் கூறி­னார். காவல்­துறை விசா­ரணை தொடர்­கிறது.