தொற்று மீண்டும் அதிகரிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் 20,000ஐத் தாண்டியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
கடந்த 24ஆம் தேதி பாதிப்பு 20,279ஆக இருந்தது. 25ஆம் தேதி 16,866ஆகவும் 26ஆம் தேதி 14,830ஆகவும் 27ஆம் தேதி 18,313ஆகவும் இருந்த நிலையில் நேற்று மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட
வழக்கில் இருவர் கைது
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே உள்ள நெட்டார் கிராமத்தை சேர்ந்தவரும் மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினருமான பிரவீன், 32 தனது கோழி இறைச்சிக் கடையை இரவில் மூடிக்கொண்டிருந்தபோது அவரை மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதில் உயிரிழந்தார். இந்த நிலையில் 15 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

